12,336 புதிய நேர்வுகள், கிள்ளான் பள்ளத்தாக்கில் 7,000-க்கும் அதிகமான நேர்வுகள்

கோவிட் 19 | நாட்டில் இன்று மதியம் வரையில், 12,336 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

கிள்ளான் பள்ளத்தாக்கில் மட்டும் 7,000-க்கும் அதிகமான நேர்வுகள் பதிவாகியுள்ளன.

மேலும், இன்று 93 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 7,241 பேர் பலியாகியுள்ளனர்.

இதற்கிடையில் இன்று, 7,567 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 924 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 448 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் (5,524), கோலாலம்பூர் (1,580), நெகிரி செம்பிலான் (970), ஜொகூர் (793), கெடா (701, சபா (657), பினாங்கு (460), சரவாக் (351), மலாக்கா (309), பேராக் (295), பஹாங் (288), திரெங்கானு (190), கிளந்தான் (179), புத்ராஜெயா (50), லாபுவான் (17), பெர்லிஸ் (2).