11,985 புதிய நேர்வுகள், 199 மரணங்கள்

கோவிட் 19 | இன்று நாட்டில், 11,985 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில், 199 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன.  இது, நாட்டில் சம்பவித்த ஆக அதிக மரண எண்ணிக்கையாகும். இந்நோய்க்கு நாட்டில் இதுவரை மொத்தம் 7,440 பேர் பலியாகியுள்ளனர்.

இதற்கிடையில் இன்று, 7,902 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 927 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 459 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் (5,550), கோலாலம்பூர் (1,174), கெடா (800), நெகிரி செம்பிலான் (745, ஜொகூர் (644), பஹாங் (603), சபா (474), மலாக்கா (453), கிளந்தான் (386), பினாங்கு (362), பேராக் (274), சரவாக் (261), திரெங்கானு (171), புத்ராஜெயா (51), லாபுவான் (35), பெர்லிஸ் (2).

மேலும் இன்று, 30 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன, அவற்றுள் பாதி பணியிடத் திரளைகள் ஆகும். இதுவரை பதிவான மொத்தத் திரளைகளில் (3,329), 931 இன்னும் செயலில் உள்ளன.