ரேஷன் கடைகளுக்கு இனி நேரில் வர வேண்டிய அவசியமில்லை – முக்கிய அறிவிப்பு

இனிமேல் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மூலம் பொருட்களை பெற்றுக்கொள்வதற்கான படிவத்தை நியாய விலை கடைகளிலே பெற்று பூர்த்தி செய்து அவர்களிடமே பொருட்களை வழங்க வேண்டும்

முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மூலம் பொருட்களை வழங்கலாம் என்று உணவுப்பாதுகாப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், நியாய விலைக்கடைகளுக்கு வர இயலாத முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், தங்களால் அங்கீகரிக்கப்பட்ட நபர்களை கடைக்கு அனுப்பி பொருட்களை பெறும் வகையில் ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் இந்த உத்தரவை நியாய விலைக்கடை ஊழியர்கள் பின்பற்றுவதில்லை என தொடர்ந்து புகார் வந்துள்ளதாகவும்,  இனிமேல் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மூலம் பொருட்களை பெற்றுக்கொள்வதற்கான படிவத்தை நியாய விலை கடைகளிலே பெற்று பூர்த்தி செய்து அவர்களிடமே பொருட்களை வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் பொது விநியோக திட்டத்தை சாராத பொருட்களை எக்காரணம் கொண்டு கட்டாய விற்பனை செய்யக்கூடாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

(நன்றி Tamilnews18)