பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை

சென்னை:

தமிழகத்தில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. 9 முதல் 12-ம் வகுப்புகள் திறக்கப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும் பள்ளி, கல்லூரிக்கு வரும் மாணவ- மாணவிகள் பாதுகாப்பை உறுதிப்படுத்த தமிழக அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக மாணவ-மாணவிகள் சுகாதார முறையில் பள்ளிகளில் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், பள்ளி, கல்லூரிகள் திறப்பு தொடர்பான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலகத்தில் சுகாதாரத் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.

முதலமைச்சர் நடத்தும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாணவர்களின் நலன் கருதி முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது.

(நன்றி maalaimalar)