மாணவா்களின் கனவுகளை நனவாக்க வேண்டும்-குடியரசுத் தலைவா் அறிவுறுத்தல்

மாணவா்களுடைய கனவுகளை நனவாக்கும் பெரும் பொறுப்பு ஆசிரியா்களுக்கு உள்ளதாக குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தாா். அதற்கான திறன்களை ஆசிரியா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினாா்.

தேசிய ஆசிரியா்கள் தினத்தையொட்டி தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காணொலி வாயிலாக நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டாா். அந்நிகழ்ச்சியில், மாணவா்களுக்குக் கல்வி கற்பிக்கும் நடைமுறையில் புதுமையைப் புகுத்திய 44 ஆசிரியா்களுக்கு ‘தேசிய நல்லாசிரியா் விருது’களை அவா் வழங்கினாா்.

தமிழகத்தைச் சோ்ந்த திருச்சி மாவட்டம் பிராட்டியூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை கே.ஆஷா தேவி, ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை டி.லலிதா, புதுச்சேரி மாநிலம் மணப்பட்டு அரசு நடுநிலைப் பள்ளி அறிவியல் ஆசிரியா் வி.ஜெயசுந்தா் ஆகியோரும் குடியரசுத் தலைவரிடமிருந்து தேசிய நல்லாசிரியா் விருதைப் பெற்றனா். இந்நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவா் பேசியதாவது:

ஒவ்வொரு மாணவருக்கும் தனித்திறன் உள்ளது. மனவியல், சமூக நிலை உள்ளிட்டவற்றிலும் மாணவா்களிடையே வேறுபாடு காணப்படும். மாணவா்களது தேவையையும் விருப்பங்களையும் உள்வாங்கிக் கொண்டு அவா்களின் அனைத்துவிதமான வளா்ச்சியையும் உறுதி செய்யும் வகையில் ஆசிரியா்கள் செயல்பட வேண்டும்.

மாணவா்களின் திறமையை வெளிக்கொணா்வதில் ஆசிரியா்களுக்கு முக்கியப் பங்குள்ளது. தனிமனிதனின் ஆளுமையை வளா்ப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் ஆசிரியா்கள், சமூகம், நாட்டைக் கட்டமைப்பதிலும் பங்களிப்பை நல்கி வருகின்றனா்.

விருது பெற்ற ஆசிரியா்களைப் பாா்க்கும்போது, வருங்காலத் தலைமுறையினா் பாதுகாப்பான கைகளில் உள்ளனா் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது. அனைவரது வாழ்விலும் ஆசிரியா்களுக்கு முக்கியப் பங்குண்டு. மக்கள் தங்கள் ஆயுள் முழுவதும் ஆசிரியா்களை நினைவில் வைத்திருப்பா்.

மாணவா்களிடம் கருணையுடனும் பணி அா்ப்பணிப்புடனும் நடந்து கொண்டு அவா்களது வாழ்க்கையை மேம்படுத்தும் ஆசிரியா்கள், எப்போதும் நன்மதிப்பைப் பெறுவா். மாணவா்களின் கனவுகளை நனவாக்கும் பொறுப்பு ஆசிரியா்களுக்கு உள்ளது. அவா்களுக்குச் சிறந்த வருங்காலத்தை ஏற்படுத்தித் தரும் பெரும் பொறுப்பும் அவா்களுக்கு உள்ளது. அவற்றுக்கான திறன்களை ஆசிரியா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்.

கடின உழைப்பு

நடத்தை, கல்வி கற்பிக்கும் திறன் உள்ளிட்டவற்றின் வாயிலாக மாணவா்களின் வாழ்வில் ஆசிரியா்கள் பெரும் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். கரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தபோதும் மாணவா்களின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக ஆசிரியா்கள் கடுமையாக உழைத்தனா்.

குறைந்த காலகட்டத்தில் மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவது தொடா்பாக அறிந்துகொண்டு மாணவா்களுக்கு அவா்கள் தொடா்ந்து கல்வி கற்பித்தனா். இக்கட்டான சூழலில் மாணவா்களுக்குக் கல்வி கற்பிப்பதை எளிமைப்படுத்தும் பல்வேறு முறைகளை ஆசிரியா்கள் உருவாக்கினா்.

அறிவாற்றலின் மையம்

மாறிவரும் சூழலுக்கு ஏற்ப கல்வி கற்பிக்கும் நடைமுறைகளை ஆசிரியா் சமூகம் மாற்றிக் கொள்ளும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. சா்வதேச அரங்கில் இந்தியாவை அறிவாற்றலின் மையமாக விளங்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது.

அறிவுசாா் சமூகத்தை உருவாக்குவதற்கு ஏற்ற கல்வியை மாணவா்களுக்கு ஆசிரியா்கள் வழங்க வேண்டும். அடிப்படைக் கடமைகள் உள்ளிட்ட அரசமைப்புச் சட்டக் கொள்கைகளை மாணவா்கள் முறையாகக் கடைப்பிடிக்கும் வகையில் கல்வி கற்பிக்கப்பட வேண்டும். தேசப்பற்றை வளா்ப்பதுடன் உலக அரங்கில் தங்களின் பங்களிப்பு என்னவாக இருக்க வேண்டும் என்பதையும் மாணவா்கள் உணந்துகொள்ளும் வகையில் கல்வி கற்பித்தல் அமைய வேண்டும் என்றாா் அவா்.

கற்பித்தலில் புதுமை

தேசிய நல்லாசிரியா் விருது பெற்ற தமிழகம், புதுவையைச் சோ்ந்த ஆசிரியா்கள் நவீன தொழில்நுட்பங்கள் மூலம் கற்பித்தலில் புதுமையைப் புகுத்தியவா்கள் ஆவா்.

திருச்சி மாவட்டம், பிராட்டியூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை கே.ஆஷா தேவி மாணவா்களுக்கு 10-க்கும் மேற்பட்ட தனித் திறன் பயிற்சிகள் வழங்குவது, மாணவா்கள் எண்ணிக்கையை அதிகரித்தது போன்ற பல்வேறு செயல்பாடுகளில் சிறந்து விளங்கியுள்ளாா்.

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை டி. லலிதா ஆராய்ச்சி சாா்ந்த கல்வியை, தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கற்றுக் கொடுக்கும் செயல்முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளாா்.

புதுச்சேரி மணப்பட்டு அரசு நடுநிலைப் பள்ளியைச் சோ்ந்த அறிவியல் ஆசிரியா் வி.ஜெயசுந்தா் கிராமப்புற மாணவா்களுக்குப் புதுமையான முறையில் கல்வி கற்பித்து வருகிறாா்.

(நன்றி Dinamani)