14,954 புதிய நேர்வுகள், புதியத் தொற்றுநோய்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது

சுகாதார அமைச்சு இன்று 14,954 புதிய கோவிட் -19 நேர்வுகளைப் பதிவு செய்து, மொத்த நேர்வுகளின் எண்ணிக்கையை 2,097,830 -ஆக பதிவு செய்துள்ளது.

செப்டம்பர் 19, 2021 நிலவரப்படி, கோவிட் -19 படுக்கை திறன் & பயன்பாடு, தடுப்பூசி மற்றும் புதிய நேர்வுகளின் தற்போதைய நிலை :-

1) கோவிட் -19 படுக்கை திறன் & பயன்பாடு (18 செப்டம்பர் 2021 வரை, மாலை 5 மணி வரை)

  • ஐசியு அல்லாத படுக்கை பயன்பாடு 67 விழுக்காடு
  • ஐசியு படுக்கை பயன்பாடு 72 விழுக்காடு

2) கோவிட் -19 தடுப்பூசி அளவின் ஒட்டுமொத்த விழுக்காடு (செப்டம்பர் 15, 2021, இரவு 11:59 வரை)

  • மொத்த மக்கள் தொகை – 1 மருந்தளவு 67.2 விழுக்காடு
  • மொத்த மக்கள் தொகை – முழுஅளவு 56 விழுக்காடு
  • பெரியவர்கள் – 1 மருந்தளவு 93.1 விழுக்காடு
  • பெரியவர்கள் – 78.2 விழுக்காடு

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சரவாக் (2,707), சிலாங்கூர் (2,028), ஜொகூர் (1,948), கிளந்தான் (1,420), சபா (1,356), பினாங்கு (1,259), பேராக் (1,222), கெடா (809), பகாங் (705), திரெங்கானு (671), கோலாலம்பூர் (383), மலாக்கா (207), நெகிரி செம்பிலான் (144), பெர்லிஸ் (76), புத்ராஜெயா (19).

லாபுவானில் புதிய நேர்வுகள் எதுவும் பதிவாகவில்லை.