‘அரசியலில் அரிய குணம்!’ : மம்தாவை புகழ்ந்த சுப்ரமணியசாமி

புதுடில்லி : மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை, பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணிய சாமி நேற்று டில்லியில் சந்தித்து பேசினார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை, பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணிய சாமி நேற்று டில்லியில் சந்தித்து பேசினார்.

இது குறித்து சாமி கூறியதாவது:நான் சந்தித்த, இணைந்து பணியாற்றிய தலைவர்களில் ஜெயபிரகாஷ் நாராயண், மொரார்ஜி தேசாய், ராஜிவ், சந்திரசேகர், நரசிம்ம ராவ் போன்ற சிலர் மட்டுமே சொன்னதை செய்யும்; செய்வதை சொல்லும் குணம் உடையவர்களாக இருந்தனர்.அந்த வரிசையில் மம்தாவும் இடம் பெற்றுள்ளார். இந்திய அரசியலில் இது மிக அரிய குணம்.இவ்வாறு அவர் கூறினார்.அப்போது, ‘திரிணமுல் காங்.,கில் இணைவீர்களா?’ என, நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ”நான் ஏற்கனவே அவருடன் தான் இருக்கிறேன்,” என பதில் அளித்தார்.

dinamalar