தங்கச்சிமடத்தில் மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

மீனவர்களை விடுதலை செய்யக்கோரி தங்கச்சிமடத்தில் உண்ணாவிரதப் போராட்டம்

மீனவர்களை விடுதலை செய்யக்கோரி தங்கச்சிமடத்தில் உண்ணாவிரதப் போராட்டம்Image caption: மீனவர்களை விடுதலை செய்யக்கோரி தங்கச்சிமடத்தில் உண்ணாவிரதப் போராட்டம்

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 68 மீனவர்களை உடனே விடுதலை செய்யக்கோரி இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் மீனவர்கள் தங்கள் குடும்பத்தினரோடு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மீனவர்களை உடனே விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற 55 பேர், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற 13 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 10 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இதையடுத்து 3 நாட்களாக மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போரட்டத்தில் பங்கேற்றுள்ள ராமேஸ்வரம் மீனவ சங்க தலைவர் ஜேசுராஜா பிபிசி தமிழிடம் கூறுகையில், “மீனவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கும் இலங்கை அரசை கண்டிக்கிறோம். இலங்கை அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா, கைது நடவடிக்கை தொடரும், படகுகள் அரசுடமையாக்கபடும் என்று கூறியுள்ளதற்கு வன்மையான கண்டிக்கத்தை பதிவு செய்வதாகவும் தெரிவித்தார்.

இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது கவலை அளிக்கிறது. அவர்களை விரைந்து விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.