பக்தியும் பரவசமும் குறையாத மிதமான தைப்பூசம்   

கோவிட்-19 செயல்பாட்டு நடைமுறைகளை (SOPs) கடைப்பிடிக்கும் கட்டாயத்தில், நாட்டில் உள்ள இந்துக்கள் இன்று தைப்பூசத்தை மிதமான அளவில் கொண்டாடினர்.

ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசக் கொண்டாட்டத்தில் நாடு முழுவதிலுமிருந்து வரும் இந்துக்களின் கவனத்தை ஈர்க்கும் பத்து மலை  ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி கோயிலில், SOPகளுடன் நடத்தப்பட்டதால் இந்த ஆண்டு உற்சாகத்தை உணரவும் வாய்ப்பு இல்லை.

கோயில் நிர்வாகத்தால் அனுமதிக்கப்படாத காவடி விழாவைத் தவிர, கோயில் மைதானத்திற்குள் நுழையும் பக்தர்களின் எண்ணிக்கை 9,000 பேருக்கு மட்டுப்படுத்தப்பட்டது.  அதே நேரத்தில் 18 பக்தர்களின் பிரார்த்தனை அமர்வுகளில்ல், ஒரு அமர்வுக்கு 500 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படனர்.

இன்று கோவிலில் மனித வளத்துறை அமைச்சர் எம்.சரவணன் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹலிமா முகமது சாதிக் ஆகியோர்  வந்திருந்தனர்.

சரவணன் தனது உரையில், அரசாங்கம் விதித்த வழிமுறைகள் மிகவும் கடிமையானதாக இருந்ததாக கூறினார். அவை தைப்பூச திருவிழாவை பக்தி பரவசத்துடன் கொண்டாடுவதை வெகுவாக கட்டுபடுத்திவிட்டது என்று தனது ஆதங்கத்தை தெரிவித்தார்.

சிலாங்கூரில், பத்து திகாவில் உள்ள சுப்ரமணியர் ஸ்வாமி கோயில், சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து இந்துக்களின் கவனத்தை ஈர்த்தது.

கோவிலில் உள்ள தன்னார்வலர், ஆர் ரவீந்திரன், 25, மக்கள் காலை 7 மணி முதலே வழிபாட்டு இல்லத்திற்குச் செல்லத் தொடங்கினர், மேலும் கோவிட் -19 பரவுவதைத் தடுக்க அமைக்கப்பட்ட SOP களை அனைவரும் கடைபிடிப்பதாகக் கூறினார்.

பினாங்கில், தண்ணீர்மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி தேவஸ்தானம் (உச்சி மலை கோயில்) கோயில் முற்றத்தில் அதிகாலை 5 மணிக்கு மட்டுமே கதவு திறக்கப்பட்டாலும், இந்துக்கள் அதிகாலை 3 மணிக்கே திரளத் தொடங்கினர் என்றார் அக்கோவிலின் தலைவர் ஆர் சுப்பிரமணியம்.