பெண்களை இரண்டாம் தர குடிமக்களாக அரசாங்கம் நடத்துகிறது-  அபிம் ஏமாற்றம்

அபிம் என்ற முஸ்லிம் தன்னார்வ தொண்டு நிறுவனம் பெண்களின்  உரிமைகளையும் கண்ணியத்தையும் ஆண்களுக்கு நிகராக நிலைநிறுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் அரசாங்கம் தவறியதற்காக தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியது..

மலேசிய இஸ்லாமிய இளைஞர் இயக்கம் (அபிம்), அரசாங்கம் பெண்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் குடியுரிமை வழங்கும் உரிமையை மறுப்பதன் மூலம் அவர்களை இரண்டாம் தர குடிமக்களாக ஆக்குகிறது.

மலேசிய தாய்மார்களுக்கு வெளிநாட்டில் பிறந்த குழந்தைகளுக்கு மலேசியக் குடியுரிமை வழங்குவது தொடர்பான முறையீட்டை அரசாங்கம் திரும்பப் பெற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

“மக்கள்தொகையில் பாதி பேர் பெண்கள், அவர்களுக்கு உரிமைகள் வழங்கப்படுவது நியாயமானது” என்று அபிம் துணைத் தலைவர்கள் ஃபாடின் நூர் மஜ்தினா நோர்டின்(Fatin Nur Majdina Nordin) மற்றும் அட்லி ஜாகுவான் ஜைராகித்னைனி(Adli Zakuan Zairakithnaini) ஆகியோர் ஒரு கூட்டறிக்கையில் தெரிவித்தனர்.

குடியுரிமைக்கான உரிமை என்பது கல்வி, சுகாதார சேவைகள் மற்றும் ஒருவரின் தாயகத்தில் கண்ணியமான வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து உரிமைகளுக்கான நுழைவாயிலாகும்.

இந்த சிக்கல்கள் நாட்டிற்கு பாதுகாப்பு அல்லது அச்சுறுத்தல்களை உள்ளடக்குவதில்லை, ஆனால் குடும்பங்களின் நல்வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

மலேசிய தாய்மார்களுக்கும் மற்றும் வெளிநாட்டு தந்தைகளுக்கும் வெளிநாடுகளில் பிறக்கும் குழந்தைகள் தானாகவே மலேசியக் குடியுரிமையைப் பெறுவார்கள் என்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி அறிவித்ததைத் தொடர்ந்து, இது சார்பான ஒரு வழக்கு நாளை கோலாலம்பூரில் உள்ள மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம்’

வெளிநாட்டவர்களைத் திருமணம் செய்துகொண்ட மலேசியத் தாய்மார்கள் வெளிநாடுகளில் குழந்தைப் பேறு பெறுவதை எளிதாக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கான கால அவகாசம் தேவை என்று உள்துறை அமைச்சர் ஹம்சா ஜைனுதீன்(Hamzah Zainudin) கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டத்தின் முன் அனைத்து நபர்களும் சமமானவர்கள் மற்றும் சட்டத்தின் சமமான பாதுகாப்பிற்கு உரிமையுடையவர்கள் என்று கூட்டாட்சி அரசியலமைப்பின் 8 வது பிரிவு கூறுகிறது என்று ஃபாடின் சுட்டிக்காட்டினார்.

“எனவே, மலேசிய தாய்மார்கள் பல்வேறு சிரமங்களை அனுபவிப்பதும், வெளிநாட்டில் பிறந்த குழந்தைகளின் உரிமைகள் பெண்கள் என்ற காரணத்திற்காக மறுக்கப்படுவதும் பொருத்தமானதல்ல” என்று பெண்கள், குடும்பம் மற்றும் சமூக நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக இருக்கும் ஃபாடின் கூறினார்.

கடந்த ஆண்டு செப்டம்பரில் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஏற்று முடிந்தவரை சிறப்பாக அதை செயல்படுத்த வேண்டும்.

“இந்தப் பிரச்சினைகள் குழந்தைகளின் தன்னம்பிக்கையைப் பாதிக்கின்றன, மேலும் சிறந்த எதிர்காலத்திற்கான நல்ல கல்வி மற்றும் சுகாதார சேவைகளைப் பெறுவதற்கான குழந்தைகளின் வாய்ப்புகளைத் தீர்மானிக்கின்றன,” என்று அவர் மேலும் கூறினார்.

மனித உரிமைகள், சிவில் சமூகம் மற்றும் தேசிய விவகாரங்களுக்கான இயக்கத்தின்  அட்லி,, “கெலுர்கா மலேசியா,என்ற முழக்கம் நமது குடிமக்கள் அனைவருக்கும் ஆதரவாக நிற்கவில்லை என்றால் அர்த்தமற்றது” என்றார்.