ஜென்கின்ஸ் விசாரணையை தெற்கு ஆஸ்திரேலிய அரசு கண்காணிக்க உள்ளது

2017 ஆம் ஆண்டு தனது வருகையின் போது தீவில் காணாமல் போன ஆஸ்திரேலியவை சேர்ந்த அன்னபூரணீ ஜென்கின்ஸ்ன் மரணம் தொடர்பான பினாங்கில் நடக்கும் விசாரணையை தெற்கு ஆஸ்திரேலிய நாடளுமன்றம் கண்காணிக்க உள்ளது.

பாரிட் புந்தாரில் பிறந்த ஜென்கின்ஸ், 65, அன்புடன் அணா என்று அழைக்கப்படுகிறார். டிசம்பர் 2017ல் தனது கணவர் ஃபிராங்குடன் ஒரு குறுகிய விடுமுறையில் பினாங்கில் இருந்தார். ஜூன் 2020ல், அவர் கடைசியாகக் Uber சவாரியிலிருந்து இறங்ககி காணப்பட்ட இடத்திலிருந்து 3 கிமீ தொலைவில் உள்ள பத்து காண்டோங்கில் உள்ள ஒரு கட்டுமான தளத்தில் அவரது எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

ஜென்கின்ஸ் குடும்பம் ஜார்ஜ் டவுனில் இன்று முதல் ஏப்ரல் 1ம் தேதி வரை நடக்கவுள்ள விசாரணைக்காக “கடினமான நான்கு வருட செயல்முறையை” கடந்து சென்றதாக நாடாளுமன்றத்தின் சட்டமன்ற உறுப்பினர் ஃபிராங்க் பங்காலோ தெரிவித்துள்ளார்.

ஜென்கின்ஸ் காணாமல் போனது மற்றும் அவரது விவரிக்கப்படாத மரணத்தின் பின்னணியில் உள்ள உண்மையை வெளிக்கொணருமாறு அவர் மலேசிய அதிகாரிகளையும், மரண விசாரணை அதிகாரியையும் அழைத்துள்ளார்.

ஜென்கின்ஸ் மகன் ஸ்டீவன், 2018ல் அணாவைக் கடைசியாகப் பார்த்த இடத்திற்கு அருகிலுள்ள ஜாலான் ஸ்காட்லாந்தில் தகவல்களைத் தேடியுள்ளார்.

“எங்கள் குடிமக்களில் ஒருவர் தனது குடும்பத்திற்கு பாதுகாப்பாக  திரும்பாததற்கு  நீதி வழங்கப்பட வேண்டும் என்று கோரி தெற்கு ஆஸ்திரேலியா நாடாளுமன்றம் வெளிப்படுத்திய தீவிர ஆர்வத்தை மலேசிய அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று பங்காலோ ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“அணாவின் பாழாக்கப்பட்ட குடும்பத்தைப் பொறுத்தவரை, நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் வழக்கை ஏதேனும் ஒரு வடிவிலான மூடுதலைக் கண்டறிவதற்கான ஒரு நீண்ட கடினமான செயல்முறையின் தொடக்கமே கொரோனிய விசாரணை” என்று அவர் கூறினார், அவரது அஸ்தியை கூடிய விரைவில் அடிலெய்டுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என ஜென்கின்ஸ் குடும்பமும் முயன்று வருகிறது, என்று அவர் கூறினார்.

மரண விசாரணை அதிகாரி நோர்சல்ஹா ஹம்சா தலைமையில் பினாங்கு அரசு வழக்குரைஞர் கைருல் அனுவார் அப்துல் ஹலீம் இதில் உதவுவார்.

ஜென்கின்ஸ் வழக்கைக் கையாள்வதில் ஆஸ்திரேலிய மற்றும் மலேசிய அதிகாரிகளுக்கு இடையே எந்த முரண்பாடும் இல்லை என்றாலும், தென் ஆஸ்திரேலிய காவல்துறை மற்றும் ஆஸ்திரேலிய ஃபெடரல் காவல்துறையுடன் தங்கள் மலேசிய சகாக்களுக்கு வழங்கக்கூடிய எந்த உதவியையும் பற்றி ஆரம்ப விவாதங்களை நடத்துவார்கள் என்று நம்புவதாக பங்காலோ கூறினார்.

-freemalaysiatoday