பாக்ஸ்லோவிட் எடுத்த 173  கோவிட்-19 நோயாளிகள் முழுமையாக குணமடைந்தனர்

வைரஸ் தடுப்பு மாத்திரை பாக்ஸ்லோவிட் வழங்கப்பட்ட பின்னர் மே 9 ஆம் தேதி வரை மொத்தம் 173 கோவிட் -19 நோயாளிகள் முழுமையாக குணமடைந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.

ஏப்ரல் 15 ஆம் தேதி வரை இந்த மருந்து கோவிட்-19 நோயாளிகளுக்கு வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.

“நோயாளிகளுக்கு எந்த பக்க விளைவுகளும் பதிவு செய்யப்படவில்லை,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் கூறினார்.

512 கோவிட்-19 மதிப்பீட்டு மையங்கள் சிஏசி மற்றும் 78 அரசு மருத்துவமனைகளுக்கு பாக்ஸ்லோவிட் மருந்து வழங்கப்பட்டுள்ளதாக கைரி கூறினார்.

“லேசான அறிகுறிகளை அனுபவிக்கும் அதிக ஆபத்துள்ள கோவிட்-19 நோயாளிகளுக்கு  பாக்ஸ்லோவிட் சிகிச்சைக்கு முன்னுரிமை அளிக்கப்படும்” என்று அவர் கூறினார்.

மலேசியாவில் கோவிட்-19 பரவுவதைத் தடுப்பதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் பொதுமக்களின் மருந்துகளுக்கான அணுகுதலை மேம்படுத்துவதற்கு அமைச்சகம் உறுதியுடன் இருப்பதாக அவர் கூறினார்.

“அனைத்து மருந்துகளும் தரம், பாதுகாப்பு மற்றும் செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் சரியாக மதிப்பிடப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம்,” என்று அவர் கூறினார்.

பபைசர் பாக்ஸ்லோவிட் மாத்திரைகள் மொத்தம் 48,000 பெட்டிகள் ஏப்ரல் 11 அன்று பார்ம நியாகா லாஜிஸ்டிக்ஸ்  நிறுவனத்திற்க்கு விநியோகம் செய்யப்பட்டன.

அதிக ஆபத்துள்ள பிரிவில் இல்லாத மற்றும் ஆக்ஸிஜன் சிகிச்சை தேவைப்படாத 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட கோவிட்-19 நோயாளிகளுக்கு இந்த மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

கடுமையான சிக்கல்களின் அபாயத்தைக் குறைக்க, அறிகுறிகளைக் காட்டிய ஐந்து நாட்களுக்குள் மருந்து எடுக்கப்பட வேண்டும்.

பாக்ஸ்லோவிட் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு மேல் பயன்படுத்த அங்கீகரிக்கப்படவில்லை.

மூட்டு வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் சுவை உணர்வில் மாற்றம் ஆகியவை மருந்தின் சாத்தியமான பக்க விளைவுகளில் சில என்று அவர் கூறினார்.

60 வயதுக்கு மேற்பட்டவர்கள் முதல் பூஸ்டரைப் பெற்ற நான்கு முதல் ஆறு மாதங்களுக்குள் இரண்டாவது பூஸ்டர் ஷாட்டைப் பெறலாம் என்றும்,18 முதல் 59 வயதிற்குட்பட்டவர்களுக்கும் இது பொருந்தும் என்று கைரி சுட்டிக்காட்டினார்.