கனடாவை உலுக்கிய கடும் புயலுக்கு 4 பேர் பலி… 9 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிப்பு

கனடாவின் கிழக்கு மாகாணங்களான  ஒன்டாரியோ மற்றும் கியூபெக் மாகாணங்களில் நேற்று கடுமையான புயல் தாக்கியது. இடி மின்னலுடன் பலத்த மழையும் பெய்தது.

இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 9 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியது. புயல், மழை தொடர்பான விபத்துகளில் 4 பேர் பலியாகினர். பலர் காயமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெறுகின்றன.

 

 

Malaimalar