கேன்ஸ் திரைப்படவிழா- இந்திய ஸ்டார்ட் அப் பிரதிநிதிகளுடன் மத்திய இணை மந்திரி கலந்துரையாடல்

75-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் சென்ற மத்திய இணை மந்திரி முருகனை பிரான்சுக்கான இந்திய தூதர் திரு ஜாவேத் அஷ்ரப் வரவேற்றார்.

கேன்ஸில் உள்ள மார்ச்சே டு பிலிம்ஸில், ஆடியோ விஷுவல் தொழிலில் தடம் பதிக்க உத்தேசித்துள்ள ஐந்து இந்திய ஸ்டார்ட்-அப்களின் பிரதிநிதிகளை அவர் சந்தித்து பேசினார்.

முன்னதாக வில்லேஜ் இன்டர்நேஷனல் ரிவியராவில் உள்ள இந்திய அரங்கை மந்திரி முருகன் பார்வையிட்டார். பிரான்சுக்கான இந்திய தூதர் ஜாவேத் அஷ்ரப் உடன் சென்றிருந்தார்.  அப்பொழுது அதிகாரிகள், பிரதிநிதிகள் மற்றும் திரையுலக பிரமுகர்களுடன் டாக்டர் எல். முருகன் கலந்துரையாடினார்.

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்ட இணை மந்திரி முருகன், பிரான்சில் உள்ள இந்திய தூதர் ஜாவேத் அஷ்ரப்பை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியா-பிரான்ஸ் உறவுகள் மற்றும் கேன்ஸ் திரைப்பட விழா உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து  உரையாடினோம் என்று தெரிவித்துள்ளார்.

 

 

Malaimalar