இலங்கைக்கு ர‌ஷ்யாவின் கச்சா எண்ணெய்

பொரு­ளா­தார நெருக்­க­டி­யில் சிக்­கித் தவிக்­கும் இலங்­கைக்கு ர‌ஷ்­யா­வி­டம் இருந்து கச்சா எண்­ணெய் கிடைக்­க­வுள்­ளது. பெட்­ரோல், டீசல் என அனைத்­துக்­கும் பற்­றாக்­குறை நில­வும் நிலை­யில், அதி­லி­ருந்து எரி­பொ­ருள் தயா­ரிக்க உள்­ளது இலங்கை.

சைபீ­ரி­யன் லைட் எனும் ரஷ்ய தர எண்­ணெய் இலங்­கை­யின் சப்­பு­கஸ்­கந்­த­வில் உள்ள சிலோன் பெட்­ரோ­லிய நிலை­யத்­தில் சுத்­தி­க­ரிப்பு செய்­யப்­படும் என்று அதன் தலை­வர் சுமித் விஜே­சிங்க சொன்­னார்.

கச்சா எண்­ணெய் இன்று இலங்­கையை சென்று சேரும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. இதை­ய­டுத்து, இரண்டு மாதங்­க­ளாக மூடிக்­கி­டந்த சுத்­தி­க­ரிப்பு நிலை­யம் மீண்­டும் செயல்­ப­டத் தொடங்­க­வுள்­ளது.

உக்­ரேன் மீதான படை­யெ­டுப்­பிற்­குப் பிறகு ர‌ஷ்­யா­மீது மேற்­கத்­திய நாடு­கள் தடை விதித்­தன. இத­னால், அமெ­ரிக்க, சில ஐரோப்­பிய நாடு­கள் ர‌ஷ்­யா­வி­டம் இருந்து கச்சா எண்­ணெய் வாங்­கு­வதை நிறுத்­தி­விட்­டன. இத­னால், ர‌ஷ்­யா­வின் எண்­ணெய் விலை வீழ்ச்சி அடைந்­தது. அதைப் பயன்­ப­டுத்தி, ஆசிய நாடு­க­ளான சீனா, இந்­தி­யா­வில் உள்ள நிறு­வ­னங்­கள் ர‌ஷ்­யா­வி­டம் இருந்து எண்­ணெய் வாங்­கத் தொடங்­கின. அந்­தப் பட்­டி­ய­லில் தற்­போது இணைந்­துள்­ளது இலங்கை. ஆனால், இதற்­கான தொகையை இலங்கை எப்­படி செலுத்­தப் போகிறது என்­பது தெளி­வாக தெரி­ய­வில்லை.

சுத்­தி­க­ரிப்பு நிலை­யம் ஆறு நாள்­களில் எரி­பொ­ருளை உற்­பத்தி செய்­யும் என்­றார் அமைச்­சர் காஞ்­சனா விஜ­ய­சே­கரா.

 

 

Tamilmurasu