பங்களாதேஷின் மிக நீளமான ரெயில்- சாலை பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் ஷேக் ஹசீனா

3.6 பில்லியன் டாலர் செலவில் வங்கதேசத்தின் முழு நிதியளிக்கப்பட்ட பல்நோக்கு ரெயில்- சாலை பாலம் ஆகும். இந்த பாலம் நமது பெருமை, நமது திறன், நமது வலிமை மற்றும் நமது கண்ணியத்தின் சின்னம்.

பங்களாதேஷில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட பத்மா பாலத்தை பிரதமர் ஷேக் ஹசீனா இன்று திறந்து வைத்தார்.

இது நாட்டின் மிக நீளமானது மற்றும் முற்றிலும் உள்நாட்டு நிதியில் கட்டப்பட்டது ஆகும். இது 6.15 கி.மீ நீளமுள்ள சாலை- ரெயில் நான்கு வழி பாலம், தென்மேற்கு வங்கதேசத்தை தலைநகர் மற்றும் பிற பகுதிகளுடன் இணைக்கும் பத்மா நதியின் மீது கட்டப்பட்டுள்ளது.

3.6 பில்லியன் டாலர் செலவில் வங்கதேசத்தின் முழு நதியளிக்கப்பட்ட பல்நோக்கு ரெயில்- சாலை பாலம் ஆகும். பத்மா பாலத்தை திறந்து வைத்த வங்கதேசத் தலைவர் பிரதமர் ஷேக் ஹசீனா கூறியதாவது:-

எனக்கு யார் மீதும் எந்த புகாரும் இல்லை. ஆனால் பத்மா பாலம் கட்டுமான திட்டத்தை எதிர்த்தவர்கள் மற்றும் அதை குழாய் கனவு என்று அழைத்தவர்கள், தன்னம்பிக்கை இல்லாதவர்கள் என்று நான் கருதுகிறேன்.

இந்த பாலம் அவர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் என்று நம்புகிறேன். இந்த பாலம் வெறும் செங்கல், சிமெண்ட், இரும்பு மற்றும் கான்கிரீட் அல்ல.

இந்த பாலம் நமது பெருமை, நமது திறன், நமது வலிமை மற்றும் நமது கண்ணியத்தின் சின்னம். இந்த பாலம் வங்கதேச மக்களுக்கு சொந்தமானது. பத்மா பாலம் கட்டும் பணியில் ஈடுபட்ட மக்களுக்கு நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.

 

Malaimalar