தாஜுடினை நீங்கியதால், அம்னோவில் எந்த நெருக்கடியும் இல்லை – புவாட் சர்காஷி

உச்ச கவுன்சிலில் இருந்து தாஜுடின் அப்துல் ரஹ்மானை நீக்குவது கட்சியில் நெருக்கடி மற்றும் பிளவை ஏற்படுத்தும் என்று எச்சரித்ததற்காக அம்னோ  எம்பி அன்னுவர் மூசாவை சாடியுள்ளார் ஒரு அம்னோ மூத்த தலைவர்..

கெத்ரா அம்னோ பிரிவுத் தலைவரான அன்னுவார், உயர்மட்டத் தலைமைக்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்களை கட்சி நீக்குவதும் மாற்றுவதும் இயல்பானது என்பதை உணரவேண்டும் என்று  அம்னோ சுப்ரீம் கவுன்சில் உறுப்பினர் புவாட் சர்காஷி கூறினார்.

“தாஜுடி னுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை கட்சியில் நெருக்கடியை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாகக் கூறி அன்னுவர்  எதையோ தூண்டிவிட முயற்சிக்கிறார்” என்று அவர் முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

“கடந்த காலத்தில் அம்னோவின் தகவல் தலைவர் பதவியில் இருந்து அன்னுவர் நீக்கப்பட்டார். அஹ்மட் மஸ்லானுக்கும், ஷம்சுல் அனுவார் நசராவுக்கும் இதே நிலைதான் ஏற்பட்டது, ஆனால் கட்சியில் எந்த நெருக்கடியும் இல்லை.

“கட்சியின் முடிவுக்கு எதிராக ஒருவர் செல்லும்போது, ​​அந்தத் தலைவரை நீக்குவது, பதவி நீக்கம் செய்வது கட்டாயமாகும்.”

2021 இல் தாஜுடினை முன்னாள் பிரதமர் முஹிடின் யாசின் பிரசாரனா தலைவராக பதவி நீக்கம் செய்த போது அன்னுவர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்று ரெங்கிட் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் புவாட் சுட்டிக்காட்டினார்.

ஜூன் 24 அன்று, மேலும் அம்னோ தலைவர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று அன்னுவர் முன்னதாக அறிவித்தார், ஏனெனில் கட்சியில் இன்னும் பலர் கட்சித் தலைமையின் அரசியல் எதிரிகளாக முத்திரை குத்தப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு பாரிசான் நேஷனல் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அன்னுவர், உச்ச கவுன்சில் உறுப்பினரை நீக்க கட்சியின் தலைவருக்கு விதிகள் இருந்தாலும், அத்தகைய நடவடிக்கைகள் அம்னோவுக்கு நல்லதல்ல என்று கூறினார்.

பாசிர் சலாக் எம்.பி.யான தாஜுடின், கட்சியின் தலைவரால் உச்ச கவுன்சிலுக்கு நியமிக்கப்பட்ட 13 பேரில் ஒருவர் ஆவார்.

கட்சியை விமர்சித்ததால் தாஜூடின் நீக்கப்பட்டார், என்று அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறினார்.

FMT