‘அமைச்சர்களின் சம்பளத்தைக் வெட்டு’ – பொருட்களின் விலை உயர்வுக்கு கண்டணம்- மாணவர்கள் மறியல்

மாணவர் குழுக்களின் ஒரு கூட்டணி நேற்று(2/7), அரசாங்கத்தின் மீதான தங்கள் கோபத்தையும், பொருட்களின் விலையேற்றம் தொடர்பாக அது நடவடிக்கை எடுக்காததையும் எதிர்த்து  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசாங்கத்திடம் அவர்களின் கோரிக்கைகள்- அமைச்சர்களுக்கான ஊதியக் குறைப்பு, மானியங்களைத் தொடர்ந்து வழங்குதல், சிறந்த பண உதவி, பொருட்களின் உச்சவரம்பு விலையை நிலைநிறுத்துதல் மற்றும் உணவுப் பாதுகாப்புப் பிரச்சினைகளைத் தீர்ப்பது.ஆகியவை அடங்கும்.

கூட்டத்தில் உரையாற்றிய  IIUM மாணவர் சங்கத் தலைவர் அலிப் நாயிப் (Aliff Naif), துணை வேளாண்மை மற்றும் உணவுத் தொழில்துறை அமைச்சர் Nik Muhammad Zawawi Salleh நேற்று முன் தினம் கூறிய கருத்து சமூகத்தில் ஒரு வேறுபாட்டை காட்டுகிறது என்றார்.

பொருட்களின் விலையேற்றம் நுகர்வோருக்கு ஒரு பெரிய பிரச்சினையாக இருக்க வாய்ப்பில்லை என்று நிக் முகமது கூறியிருந்தார்

“எங்கள் முதல் கோரிக்கை அமைச்சர்கள் சம்பளக் குறைப்பு எடுக்க வேண்டும், சமத்துவத்தைக் காட்ட வேண்டும் என்பதுதான்”.

அவர்கள் (அமைச்சர்கள்) எங்கள் நிலைமையை புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் எங்கள் அவலநிலையைப் புரிந்துகொள்வதற்காக அவர்கள் ஊதியக் குறைப்புக்களை எடுக்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்,” என்று கோலாலம்பூரில் உள்ள பசார் செனியில் கூடியிருந்த 100 ஆர்ப்பாட்டக்காரர்களிடம் அலிஃப் கூறினார்.

இதற்கிடையில், மலேசிய முஸ்லீம் மாணவர்களுக்கான தேசிய சங்கத்தின் தலைவர் அகமத் ஃபர்ஹான்(Ahmad Farhan), மாணவர்கள் தங்கள் விரக்தியை வெளிப்படுத்த அமைதியுடன் கூடியதாக கூறினார்

முன்பிருந்தே மக்கள் அத்தியாவசியத் தேவைகளான முட்டை, கீரை போன்றவற்றை வாங்க முடியாமல் சிரமப்படுவதாக வருத்தம் தெரிவித்தார்.

“இப்போது கோழி, மீன் மற்றும் கங்குங் கீரை ஆகியவற்றின் விலைகள் அதிகரித்துள்ளன.

“இவற்றை அனுமதிக்கக் கூடாது என்பதை நிரூபிப்பதற்காக நாம் இங்கு கூடியுள்ளோம், “என்று அவர் மேலும் கூறினார்.

சுமார் 50 போலீஸ் அதிகாரிகள் 40 நிமிட போராட்டத்தை எந்த இடையூறும் இல்லாமல் பார்த்தனர்

கடந்த வாரம், IIUM மற்றும் மலாயாப் பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கங்கள், பொருட்களின் விலைகளைக் குறைக்குமாறு அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்தன. அவ்வாறு செய்யத் தவறினால் அது ஒரு ஆர்ப்பாட்டத்திற்கு வழிவகுக்கும் என்பதைக் குறிக்கிறது.

அவர்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்காவிட்டால், மீண்டும் ஒரு பொது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என்று அலிஃப் இன்று அரசாங்கத்தை எச்சரித்தார்.

“எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், நீங்கள் எங்களைப் பார்ப்பது இதுவே கடைசி முறையாக இருக்காது. நாங்கள் பேசுவது இது கடைசி முறை அல்ல, “என்று அவர் கூறினார்.