போர்க்கப்பல் ஊழல் – முன்னாள் கடற்படை தலைவர் குற்றம் சாட்டப்பட்டார்

இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில், கப்பல் கட்டும் Boustead Naval Shipyard (BNS) இன் முன்னாள் உயர் அதிகாரி அமாட்  ரம்லி முகமட் நோர்(Ahmad Ramli Mohd Nor) மீது  குற்றவியல் நம்பிக்கை மீறல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

ராயல் மலேசியன் கடற்படைக்காக ஆறு கடல் போர் கப்பல்களை (LCS) உருவாக்குவதற்கு BNS நியமிக்கப்பட்டது.

78 வயதான குற்றம் சாட்டப்பட்ட அமாட், முன்னாள் BNS நிர்வாக இயக்குநரும், துணை நிர்வாகத் தலைவருமாவார்.

குற்றவியல் சட்டம் 409வது பிரிவின் கீழ் RM21.08 மில்லியனை உள்ளடக்கிய மூன்று குற்றவியல் நம்பிக்கை மீறல் (criminal breach of trust) குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.

குற்றவியல் சட்டத்தின் பிரிவு 409 இன் கீழ் இந்த குற்றச்சாட்டுக்கு அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

காலை 9 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜரான ராம்லி, நீதிபதி சுசானா ஹுசைன் (Susana Hussein) முன் வாசிக்கப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி அல்ல என்று மறுத்தார்.

இந்த மாத தொடக்கத்தில், பொதுக் கணக்குக் குழு (Public Accounts Committee ) தனது அறிக்கையில், ரிம9 பில்லியன் LCS ஒப்பந்தத்தில் ரிம1.4 பில்லியன் அளவுக்கு செலவினத்தில் ஒரு பெரிய அதிகரிப்பை வெளிப்படுத்தியது, 2020 வரை RM6 பில்லியன் செலுத்தப்பட்டது.

2014 இல் தொடங்கப்பட்ட இந்த திட்டதிற்கு, அரசு இவ்வளவு பெரிய தொகையை செலுத்தியும், கடந்த எட்டு ஆண்டுகளாக எந்த ஒரு கப்பல் பணியும் முடிக்கப்படவில்லை.

LCS வழிகாட்டுதல் குழுத் தலைவராகப் பணியாற்றிய ராம்லியின் பெயர் பல இடங்களில் குறிப்பிடப்பட்உள்ளதாக  அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

இதைத் தொடர்ந்து, LCS கட்டுமானத் திட்டங்களைக் கையாள்வதில் முறைகேடு செய்ததாகக் கூறப்படும் நபர்களிடம் பல விசாரணைகளை முடித்துவிட்டதாக MACC ஆகஸ்ட் 11 அன்று தெரிவித்தது.

RM500k ஜாமீன்

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக ரிம500,000 பிணை வழங்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று துணை அரசு வழக்கறிஞர் அஹ்மத் அக்ரம் கரிப் கோரினார்.

ராம்லியை பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர் முகமது யூசோப் ஜைனல் அபிடின் முன்மொழியப்பட்ட தொகையை எதிர்க்கவில்லை.

நீதிமன்றம் ரிம 200,000 பாதுகாப்புடன் ரிம500,000 பிணையை வழங்கியதுடன், நவம்பர் 24ம் தேதி குறிப்பிடப்பட வேண்டும் என்று நிர்ணயித்தது. ராம்லி தனது வழக்கு முடியும் வரை தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டது.

ராயல் மலேசியக் கடற்படையில் 35 ஆண்டுகள் பணியாற்றிய ராம்லி, 1996 அக்டோபரில் கடற்படைத் தலைவராக நியமிக்கப்பட்டார். அவர் 1998 இல் ஓய்வு பெற்றார்.

பின்னர் ஆகஸ்ட் 17, 2005 அன்று Boustead Heavy Industries Corp Bhd வாரியத்திற்கு நியமிக்கப்பட்டார். அவர் நவம்பர் 30, 2019 அன்று நிர்வாகக் குழுவில் இருந்து ராஜினாமா செய்தா.ர்