குறைந்த, தாமதமான சம்பளம் காரணமாக எஸ்பிஎம் தேர்வுகளுக்கான மதிப்பீடு பணியிலிருந்து ஆசிரியர்கள் விலகி வருகின்றனர்

குறைந்த சம்பளம் காரணமாக சிஜில் பெலஜாரன் மலேசியா எஸ்பிஎம் போன்ற பொதுத் தேர்வுகளுக்கான மேற்பார்வை பார்க்கும் ஆசிரியர்கள்,தேர்வுக்கான கண்காணிப்பாளர்கள் விலகுகின்றனர்.

ஒழுங்கு நடவடிக்கைக்கு பயந்து பெயர் சொல்ல விரும்பாத ஆசிரியர் ஒருவர், ஆசிரியர்களுக்கான சம்பளம் தாமதமாக வழங்கப்படுவது மட்டுமல்லாமல், அவர்கள் செலவிட்ட ஆற்றல் நேரத்திற்கான ஏற்ற சம்பளம் வழங்கப்படவில்லை என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

SPM வாய்வழித் தேர்வுக்கான மதிப்பீட்டாளர்களுக்கு ரிம75 வழங்கியதாகவும், அதேசமயம் வெறும்  மதிப்பீட்டாளர்கள் ரிம150 பெற்றதாகவும் அவர் கூறினார்.

பல நாட்கள் மாணவர்களை மதிப்பீடு செய்தாலும் கூடுதல் கட்டணம் செலுத்தப்படுவதில்லை .

உரையாசிரியர்கள் ஆறு மதிப்பெண்கள் வரை பங்களிக்கின்றனர், அதேசமயம் மதிப்பீட்டாளர்கள் வாய்மொழித் தேர்வில் 18 மதிப்பெண்கள் வரை வழங்கலாம்.

ஏழு மாதங்களுக்குப் பிறகும் ஊதியத்திற்காகக் காத்திருக்கும் ஆசிரியர் ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

“கல்வி அமைச்சகம் பணத்தை சேமிக்க விரும்புகிறது. ஆசிரியர்களான எங்களைப் பற்றி கவலை என்ன? எங்களுக்கும் தேவைகள் உள்ளன.”

அமைச்சகத்திடம் விசாரித்த ஒரு ஆசிரியர், “பொறுமையாக இருங்கள்” என்றுதான் பதில் கிடத்தது என்றார்.

இந்த விவகாரத்தை தீர்க்க கல்வி அமைச்சகத்துடன் தொழிற்சங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தேசிய ஆசிரியர் தொழில் சங்கத்தின் (NUTP) பொதுச்செயலாளர் ஃபௌசி சிங்கன் தெரிவித்துள்ளார்.-FMT