ஒன்றாய் எழுவோம்..! சிறிலங்காவின் 75 ஆவது சுதந்திர தின நிகழ்வு காலி முகத்திடலில்

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளை காலி முகத்திடலில் முன்னெடுப்பதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

“ஒன்றாய் எழுவோம்“ என்ற தொனிப்பொருளில் 75 ஆவது சுதந்திர தினம் காலி முகத்திடலில் கொண்டாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதிபர் ஊடகப்பிரிவு

அதிபர் ஊடகப்பிரிவு இந்த விடயத்தினை அறிவித்துள்ளது.

சுதந்திர தின நிகழ்வுகளை பாதுகாப்பான முறையில் முன்னெடுப்பது தொடர்பில் நேற்றைய தினம் இராஜாங்க அமைச்சர் அசோக்க பிரியந்த தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

-ibc