அரசாங்கத்திற்கு எதிரான PAS இன் இடைவிடாத தாக்குதல்களை PN தலைவர் கட்டுப்படுத்துவாரா?

நவம்பர் 19 அன்று நடந்த தேர்தலில் பெரிகாத்தான் நேசனல் (PN) தோல்வியடைந்ததிலிருந்து, அதன் அங்கமான PAS, பக்காத்தான் ஹராப்பான்- தேசியமுன்னணி அரசாங்கத்திற்கு எதிராக இடைவிடாத தாக்குதல்களை நடத்தி வருகிறது.

பெரும்பாலான தாக்குதல்களில், ஹராப்பானின் அங்கமான DAP பாதிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமியக் கட்சி இன்று தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவில், அரசாங்கத்தில் ஒன்றாக இணைந்து பணியாற்றுவதன் மூலம் இறுதியாக  DAP இன் கட்டளையை நிறைவேற்றியதற்காக அம்னோவுக்கு தனது “இரங்கலை” தெரிவித்தது.

“இப்போது அம்னோ அடித்தட்டு மக்கள் டிஏபியை மீண்டும் ‘தொந்தரவு’ செய்ய முடியாது என்ற உண்மையை ஏற்க வேண்டும். டிஏபி தலைவர்கள் போதித்தபடி கம்யூனிஸ்டுகள் இப்போது நாட்டின் ஹீரோக்கள் என்பதை அம்னோ உறுப்பினர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும்”.

“ஒரு காலத்தில் நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடிய அம்னோ, இப்போது நாட்டின் சுதந்திர வரலாற்றை DAP, மாற்றியமைக்க உதவ வேண்டும். வாழ்த்துக்கள் DAP, அம்னோவுக்கு அனுதாபங்கள்,” என்று பாஸ் மத்தியக் குழுவின் அறிக்கை கூறுகிறது.

DAP க்கு அடிபணிய வேண்டிய கட்டாயத்தில் அம்னோ ஹராப்பானில் அதிக இடங்களைக் கொண்டிருப்பதால், அம்னோ “நிர்பந்திக்கப்படுகிறது” என்று அந்தச் செய்தி மேலும் குற்றம் சாட்டியுள்ளது.

PAS இன் தாக்குதல்களில் முன்னணியில் இருப்பவர் அதன் தலைவர் அப்துல் ஹாடி அவாங் (மேலே, வலது), கடந்த வாரம் DAP இஸ்லாமிய வெறுப்பை ஊக்குவிப்பதாகக் குற்றம் சாட்டினார்.

அதே நேரத்தில், PAS மத்தியக் குழுவும், பிரதமர் அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கத்தின் மீது சவாரி செய்வதன் மூலம் DAP ஒரு “ஒட்டுண்ணி” என்று குற்றம் சாட்டியது.

முன்னதாக, அன்வார் ஒரு இஸ்ரேலிய ஏஜென்ட் என்று PAS இன் பாலிங் எம்பி ஹசன் சாத் குற்றம் சாட்டினார், இதன் விளைவாகக் குற்றவியல் அவதூறு மற்றும் அமைதியை சீர்குலைத்ததற்காகக் காவல்துறை அவரை விசாரணை செய்தது.

கடந்த வாரம், ஹாடி, உலகக் கோப்பையின் நடுவர், தோல்வியுற்றவர்களுக்கு கோல்போஸ்டை மாற்றுவது நியாயமா என்று, கால்பந்து ஒப்பிலக்கத்தைப் பயன்படுத்திய பிறகு, மன்னர் அன்வாரை பிரதமராக நியமித்தது குறித்து கேள்வி எழுப்பினார்.

கூட்டாட்சி அரசாங்கத்தை அமைக்கத் தனிப்பெரும்பான்மையைப் பெற வேண்டும் என்று PN வலியுறுத்தியபிறகு, இது கூட்டணியின் தலைவர் முகைடின் யாசின் (மேலே, இடது) தலைமையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

முகைடின் அமைதியாகக் காணப்பட்டார்

PAS இன் இந்த அரசியல் தாக்குதலுக்கு மத்தியில் எழுப்பப்பட்ட மற்றொரு கேள்வி, இந்த விவகாரம் தொடர்பாக முகைடின் மௌனம் காத்தது.

அவரது கடைசி அறிக்கை நவம்பர் 25 அன்று, தேர்தல்களில் தனது கூட்டணியின் தோல்வியை ஒப்புக்கொண்டபின்னர், அரசாங்கத்துடன் நம்பிக்கை மற்றும் விநியோக ஒப்பந்தம் (confidence and supply agreement) குறித்து அவர் கோடிட்டுக் காட்டினார்.

அரசாங்கத்திற்கு ஒரு சமநிலை பங்களிப்பை வழங்குவதற்கு PN தொடர்ந்து எதிர்க்கட்சியில் இருக்கும் என்றும் முகைடின் கூறினார்.

பாகோ எம்பியின் முகநூல் பக்கமும் கடைசியாக நவம்பர் 25 அன்று புதுப்பிக்கப்பட்டது, அதே நாளில் மேற்கண்ட இரண்டு அறிக்கைகளும் வெளியிடப்பட்டன.

இத்தகைய அரசியலுக்கு மத்தியில், ஆட்சியாளர்கள் மாநாடு, மலேசியர்களிடையே “ஒற்றுமை உணர்வை” ஏற்படுத்துமாறு புதிய அரசாங்கத்தை வலியுறுத்தியது.

ஆட்சியாளர்களின் சமீபத்திய 260 வது மாநாட்டிற்கு தலைமை தாங்கியபின்னர் ஒரு ஆணையில், நெகிரி செம்பிலானின் யாங் டி-பெர்டுவான் பெசார் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிர் இனவெறி மற்றும் மதத் தூண்டுதலை நிறுத்துமாறு அழைப்பு விடுத்தார்.

“இன அல்லது மத பிரச்சினைகளைத் தூண்டும் நோக்கத்துடன் எழுப்பும் தலைவர்கள் இனி இருக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்”.

“இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நாட்டை மேலும் உயரத்திற்கு கொண்டு செல்லப் புதிய அரசாங்கத்தை நான் கேட்டுக்கொள்கிறேன்,” என்று ஆட்சியாளர் ஆணையிட்டார்.

டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் இன்று ஹாடி மற்றும் பிற பாஸ் தலைவர்களை DAPயும் அதன் கூட்டாளிகளும் இஸ்லாமோபோபியாவை ஊக்குவிக்கிறார்கள் என்பதற்கான ஆதாரங்களைச் சமர்ப்பிக்குமாறு தூண்டுவதற்கு ஒரு ஆணையம் அமைக்க முன்மொழிந்தார்.

“பொய்கள், பயம், வெறுப்பு, இனம் மற்றும் மதத்தின் நச்சு அரசியலால்,” மலேசியா பிளவுபடுவதைத் தடுப்பது குறித்தும் ஆணையம் பரிந்துரைகளை வழங்க வேண்டும் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஆணையத்தை அமைப்பது அவசரப் பிரச்சினையாக இருக்க வேண்டும், அன்வார் தலைமையிலான புதிய அமைச்சரவையால் தீர்க்கப்பட வேண்டும் என்று லிம் வலியுறுத்தினார்.