இன்று வாக்கு எண்ணிக்கை – குஜராத், இமாசலில் முதலிடம் யாருக்கு?

குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டசபைகளுக்கு தேர்தல் நடைபெற்றது. 182 தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

1-ம் தேதி முதற்கட்ட தேர்தலும், 5-ம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலும் நடைபெற்றது. இதேபோல், 68 தொகுதிகளை கொண்ட இமாச்சல பிரதேசத்திற்கு கடந்த 12-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை பல்வேறு செய்தி நிறுவனங்கள் வெளியிட்டன.

குஜராத்தில் 182 தொகுதிகளில் பெரும்பான்மை பெற 92 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும். பெரும்பாலான செய்தி நிறுவனங்கள் குஜராத்தில் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என தெரிவித்தன.

இதேபோல, இமாச்சல பிரதேசத்தில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் இழுபறி நீடிக்கலாம் என கருத்துக் கணிப்புகள் கூறின. இந்நிலையில், குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு இரு மாநிலங்களிலும் பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மதியத்துக்கு மேல் மகுடம் சூடப்போவது யார் என்பது தெரிந்துவிடும்.

 

 

-mm