மக்கள் உதவவில்லை என்றால் சிறை செல்வேன் – மைத்திரி எடுத்த தீர்மானம்

நீதிமன்ற வழக்கு தீர்ப்பின் மூலம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள 10 கோடி ரூபாவை செலுத்துவதற்கு தன்னிடம் பணபலம் இல்லை முன்னாள் ஜனாதிபதி நாடாளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அந்த தொகையை மக்களிடம் இருந்து வசூலிக்க உள்ளதாகவும், மக்கள் செலுத்தாவிட்டால் சிறை செல்ல நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

10 கோடி வழங்க வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. 10 கோடி கொடுக்க பண பலம் இல்லை. 10 கோடி மக்களிடம் வசூலிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

என்னிடம் மோட்டார் சைக்கிள் கூட இல்லை. நாடு முழுவதிலும் இருந்து பணம் சேகரிக்க வேண்டும். கொடுக்கவில்லை என்றால் சிறைக்கு செல்வேன்.

சகோதரனாக இருந்தும் எனக்கும் டட்லி சிறிசேனவின் வியாபாரத்துக்கும் தொடர்பில்லை. எங்கள் குடும்பத்தில் 11 பேர். தந்தைக்கு 05 ஏக்கர் நெற்பயிர்களும் 03 ஏக்கர் நிலமும் இருந்தது.

ஐந்து ஏக்கர் நெல் வயல்களை சகோதரிகள் பகிர்ந்து கொள்கின்றனர். மூணு ஏக்கர் நிலத்துல மாம்பழம் பயிரிட்டேன். வேறு வருமானம் இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

-if