இலங்கைக்கு உதவ விருப்பம் தெரிவித்துள்ள இத்தாலி குடியரசு

இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட மனித கடத்தல் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக ஹெலிகொப்டர்களை வழங்குவதன் மூலம் இலங்கைக்கு உதவ இத்தாலி குடியரசு விருப்பம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இத்தாலிய தூதுவர் ரீட்டா கியுலியானா மன்னெல்லா இதனைத் தெரிவித்துள்ளார்.

இத்தாலிக்கும் இலங்கைக்கும் இடையிலான பங்காளித்துவத்தை வலுப்படுத்துவது குறித்து இருவரும் கலந்துரையாடியதுடன், கலாசார பரிமாற்றங்கள், சுற்றுலா மேம்பாடு, சாத்தியமான முதலீடுகள், பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் இந்த சவாலான காலங்களில் இத்தாலி எவ்வாறு இலங்கைக்கு உதவ முடியும் என்பது குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

 

 

-if