ஏமாற்றப்படும் பாதுகாவலர்கள், அமைச்சர் தலையிட வேண்டும் -சோசியலிஸ்ட் கட்சி

பாதுகாவலர்களுக்கு (செக்குரிட்டு கார்ட்ஸ்)  உரிய ஊதியம் வழங்கப்படவில்லை என்பது குறித்து கட்சிக்கு பல புகார்கள் வருவதால், பாதுகாப்பு சேவை நிறுவனங்களில் திடீர் சோதனைகளை நடத்துமாறு டி மலேசியா சோசியலிஸ் கட்சி (பிஎஸ்எம்) மனித வள அமைச்சகத்தை வலியுறுத்தியுள்ளது.

இதன் பொதுச்செயலாளர் சிவராஜன் ஆறுமுகம், ஒரு பாதுகாவலர் தனது கூடுதல் நேர வேலைக்கு குறைவான ஊதியம் பெற்ற ஒரு சம்பவத்தை எடுத்துக்காட்டினார்.

இன்று அவர் ஒரு ட்வீட்டில், கோலாலம்பூரில் உள்ள தொழிலாளர் துறையில் அவருக்கு வழங்க வேண்டிய கூடுதல் நேர ஊதியத்தை அவர் இறுதியாகப் பெற்றதாகக் கூறினார்.

“இது முதல் வழக்கு அல்ல. பாதுகாப்பு நிறுவன முதலாளிகளால் இதே முறையில் ஏமாற்றப்படும் இன்னும் பல தொழிலாளர்கள் நிச்சயமாக உள்ளனர்.”

மனிதவளத்துறை அமைச்சர் வி சிவக்குமார் இப்போது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று சிவராஜன் (மேலே) கூறினார்.

‘ஓவர் டைம் ஊதியம் தவறாகக் கணக்கிடப்பட்டது’

பின்னர் மலேசியாகினியிடம் பேசிய அவர், ஜனவரி 2021 முதல் அக்டோபர் 2022 வரை பணிபுரிந்த காவலாளியின் கூடுதல் நேர ஊதியம் தவறாகக் கணக்கிடப்பட்டு, ஒவ்வொரு மாதமும் குறைவான ஊதியம் வழங்கப்பட்டது என்றார்.

ஒவ்வொரு நாளும் அவர் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை மொத்தம் 12 வேலை நேரங்களுக்கு நான்கு மணிநேரம் கூடுதலாக வேலை செய்தார், ஆனால் அவரது அடிப்படை RM1,200 மாத சம்பளத்தின் அடிப்படையில் கூடுதல் நேர ஊதியத்திற்கான கணக்கீடுகள் செய்யப்பட்டபோது, RM300 முதல் RM1,000 வரை பற்றாக்குறை ஏற்பட்டது.

ஓய்வு நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்களில் கூடுதல் நேரம் வேலை செய்வதற்கான ஊதியமும் இதில் அடங்கும் என்று சிவராஜன் மேலும் கூறினார்.

“அவர் PSM-ஐ மற்றொரு காவலாளி மூலம் சந்தித்தார், நாங்கள் உதவி செய்தோம் மற்றும் இந்த விஷயத்தில் புகார் செய்தோம். ஜனவரி 5, 2023 அன்று கோலாலம்பூர் தொழிலாளர் துறையில் நாங்கள் வழக்கைத் தாக்கல் செய்தோம்.” என்றார்.

“நல்லிணக்கக் கூட்டங்கள் நடத்தப்பட்டன, இன்று வழக்கு விசாரணை தொடங்குவதற்கு முன்பு நிர்வாகம் சமரசம் செய்ய ஒப்புக்கொண்டது,” என்றும் அவர் கூறினார்.

தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான சம்பளம் இருப்பதாகச் சொல்வது இதில் அடங்கும், ஆனால் அவர்கள் தினமும் 12 மணிநேரம் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் – இல்லையெனில் அவர்களுக்கு வேலை வழங்கப்படாது.

தொழிலாளர்கள் ஓய்வு நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்களிலும் பணிபுரியுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், என்றார்.

“இந்த குறிப்பிட்ட வழக்கில், ஒருவர் 12 மணி நேரம் செய்தால் அதில் ஓவர் டைம் 4 மணி நேரமாகும், ஆனால் கணக்கீடுகள் இரண்டரை மணிநேர கூடுதல் வேலை என்ற அடிப்படையில் கணக்கிடபடுகிறது.