நேபாள வான் பகுதியில் தீப்பிடித்து எரிந்த சீன ராக்கெட்

உளவு செயற்கைக் கோள்களை விண்வெளிக்கு அனுப்பப் பயன்படுத்தப்பட்ட சீன ராக்கெட், நேபாள வான் பகுதியில் தீ பிடித்து எரிந்துள்ளது.

அமெரிக்க கடற்படை நிறுவனம் யுஎஸ்என்ஐ இதனை தெரிவித்துள்ளது.

மத்திய சீனாவில் இருந்து செலுத்தப்பட்ட சாங் செங் 2டி லாங் மார்ச் என்ற அந்த ராக்கெட், உளவு செயற்கைக் கோள்களை விடுவித்த பின்னர் சுமார் 200 நாட்கள் விண்வெளியில் இருந்த பிறகு, கடந்த சனிக்கிழமையன்று வளிமண்டலத்தில் மீண்டும் நுழைந்த போது தீ பிடித்து எரிந்துள்ளது. இதனை வானியல் இயற்பியலாளர் ஜொனாதன் மெக்டோவல் உறுதிப்படுத்தியுள்ளார்.

 

 

-tw