குறைந்தபட்ச ஊதியம் வழங்கத் தவறியதற்காக முதலாளிகளுக்கு அபராதம்

கடந்த ஆண்டு மே 1 முதல் டிசம்பர் 31 வரை அமல்படுத்தப்பட்ட குறைந்தபட்ச ஊதிய ஆணை 2022க்கு இணங்கத் தவறியதற்காக நாடு தழுவிய அளவில் பல  முதலாளிகளுக்கு 35,700 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த காலகட்டத்தில், தொழிலாளர் துறை 28,722 இடங்களில் சோதனை நடத்தியதாகவும், இதன் விளைவாக 33 வழக்குகள் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டதாகவும் துணை மனிதவள அமைச்சர் முஸ்தபா சக்முட் கூறினார்.

அதே நேரத்தில், 2,659 இணக்கப் பரிந்துரைகள் செய்யப்பட்டன, என்று அவர் இன்று டேவான் நெகாரா சபையில் கேள்வி-பதில் அமர்வின் போது கூறினார்.

குறைந்தபட்ச ஊதியமான 1,500 ரிங்கிட்டுக்கு இணங்காத முதலாளிகளுக்கு எதிரான அரசாங்கத்தின் அமலாக்க நடவடிக்கைகளை அறிய விரும்பிய செனட்டர் லோ கியான் சுவானின் துணைக் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

தேவைக்கு இணங்கத் தவறும் முதலாளிகள் மீது வழக்குத் தொடரப்படும் மற்றும் அதிகபட்சமாக 10,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும் என்று முஸ்தபா கூறினார்.

குறைந்தபட்ச ஊதிய ஆணை 2022 மே 1, 2022 முதல் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் முதலாளிகளுக்கு அமல்படுத்தப்பட்டது. இருப்பினும், ஐந்துக்கும் குறைவான தொழிலாளர்களைக் கொண்டவர்களுக்கு இது ஜூலை 1 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட்டுள்ளது.

-fmt