கோட்டாபய வீட்டுக்கு அருகே ஏற்பட்ட பதற்றம்: குவிக்கப்பட்ட இராணுவத்தினர்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வீட்டுக்கு அருகில் கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு மக்கள் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டமானது இன்றைய தினம் (31-03-2023) முன்னெடுக்கப்பட்ட நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

இதனால் அங்கு பதற்றநிலை நிலவியதை அடுத்து, அப்பகுதியில் ஏராளமான பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

 

-jv