2,000 ரூபாய் நோட்டுகள் விரைவில் செல்லாது –  திரும்பப் பெறுகிறது அரசு

இந்தியா தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கங்களே இருக்கும் தருவாயில்,  2,000 ரூபாய் நோட்டுகள் இனி பொதுவாக பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தப்படுவதில்லை என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்ப்ட்டது.

பொது மக்கள் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை 2,000 ரூபாய்  நோட்டுகளை தங்கள் வங்கிக் கணக்குகளில் அதிகபட்சம் 20,000 ரூபாய்களில் டெபாசிட் செய்யலாம் அல்லது மற்ற வகைகளுக்கு மாற்றலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது.

காலக்கெடுவை சந்திக்க முடியாதவர்களுக்கு என்ன நடக்கும் என்று அது கூறவில்லை, ஆனால் தற்போது வரை நோட்டுகள் சட்டப்பூர்வமான டெண்டராகவே உள்ளன.

இந்த நடவடிக்கையானது 2016ல் பிரதமர் நரேந்திர மோடியின் பணமதிப்பிழப்பு முடிவை எதிரொலிக்கிறது, இது ஒரு முக்கிய மாநிலத் தேர்தலுக்கு வாரங்களுக்கு முன்பு வந்தது மற்றும் அரசியல் போட்டியாளர்களின் செலவினங்களைக் கட்டுப்படுத்துவதாகக் கூறப்பட்டது.

இந்த நடவடிக்கை பொதுமக்களிடம் இருந்த குறிப்பிட்ட அந்த மதிபு கொண்ட அனைத்து பணத்தையும் அகற்றினாலும், அது  புழக்கத்தில் உள்ள 11% நாணயத்தை மட்டுமே பாதிக்கிறது. அது ஒரு சின்ன குழப்பத்தை மட்டுமே தூண்டும்.

2,000 ரூபாய் நோட்டுகள் பொதுவாக பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தப்படுவதில்லை என்றும், மற்ற மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளின் இருப்பு பொதுமக்களின் நாணயத் தேவையைப் பூர்த்தி செய்ய போதுமானதாக இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்தது.