செப்டம்பர் மாதத்திற்குள் கடன் மறுசீரமைப்பு திட்டத்தை நிறைவு செய்ய முடியும் – ஜனாதிபதி

கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை செப்டெம்பர் மாதத்திற்குள் இலங்கை வெற்றிகரமாக நிறைவு செய்து பொருளாதாரத்தை ஒரு நிலையான நிலைக்கு கொண்டு வர முடியும்” என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

பொருளாதாரக் கொள்கை

ஐக்கிய தேசியக் கட்சியின் இந்த பொருளாதாரக் கொள்கைக்கு பொதுஜன பெரமுனவும் தேவையான ஆதரவை வழங்கியது.

இந்த நாடு மீள வேண்டுமானால் அந்த ஆதரவு மிகவும் முக்கியமானது. இந்தநிலையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து. திவால் நிலையில் இருந்து வளமான நாட்டைக் கட்டியெழுப்ப நாம் அனைவரும் ஒன்றிணைந்து கடுமையாக உழைக்க வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் இலங்கை வங்குரோத்து நாடாக அறிவிக்கப்பட்ட பின்னர் முதலீட்டாளர்கள் எவரும் நாட்டுக்கு வரவில்லை.

சர்வதேச நாணய நிதியம்

இந்த சூழ்நிலையிலேயே நாட்டின் பொருளாதாரத்தை நிலையான நிலைக்கு கொண்டு வர சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்லவேண்டியேற்பட்டது.

சிங்களவராக இருந்தாலும் சரி, தமிழர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் பிச்சைக்காரர்களாக வாழ விரும்புவதில்லை. அவர்கள் கண்ணித்துடனேயே வாழ விரும்புகின்றனர்.

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு கடுமையான நிபந்தனைகளை விதித்திருந்தது. ஆனால் இலங்கைக்கு அவற்றை நிறைவேற்றுவதை தவிர வேறு வழிகள் இல்லை என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

-tw