போர்க்குற்ற அறிக்கை தொடர்பில் ஐ.நா. செயலர் தீவிர கவனம்

ஐ.நா. நிபுணர்க் குழுவின் போர்க்குற்ற அறிக்கை தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஐ. நாவின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தீவிர கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகளின் ஏனைய நிறுவனங்களிடம் அறிக்கையை சமர்ப்பிப்பது குறித்து, கவனம் செலுத்தி வருவதாக ஐ.நாவின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நிபுணர்க் குழு அறிக்கை தொடர்பில் ஐ. நாவின் செயலாளர் நாயகம் இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டமையையும் பர்ஹான் ஹக் உறுதிப்படுத்தியுள்ளார்.

இறுதிக்கட்ட போரின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளருக்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் தருஸ்மன் தலைமையிலான மூவர் அடங்கிய குழு இந்த அறிக்கையை தயாரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.