பத்மஸ்ரீ விருதை திருப்பி ‌கொடுத்த காந்தியவாதி!

காந்தியின் பொருட்கள் ஏலம் விடப்படுவதை எதிர்த்த பிரபல எழுத்தாளரும் காந்திவாதி தனக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திருப்பி அளித்தார்.

காந்திஜியின் ரத்த கறை படிந்த புல், புல்லில் இருந்த மண் உள்ளிட்ட பொருட்கள் லண்டனில் ஷ்ராப்ஷையர் பகுதியில், ‘முல்லக்’ ஏல நிறுவனத்தால், ஏலம் விடப்பட்டது. இதனை இந்தியா உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என காந்தியவாதி கிரிராஜ் கிஷோர் என்பவர் பிரதமருக்கு கடிதம் எழுதினார்.

இந்நிலையில் காந்தியின் ரத்தகறை படிந்த புல், 8 இலட்சம் இந்திய ரூபாய்க்கும், கடந்த 1890-ம் ஆண்டு அவர் சட்டம் படிப்பதற்காக பயன்படுத்திய மூக்கு கண்ணாடி, 28 இலட்சம் இந்திய ரூபாய்க்கும் ஏலம் போனது. இதற்கு கண்டனம் தெரிவித்து கிரிராஜ்கிஷோர் தனக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதினை திருப்பி அளிக்க முடிவு செய்தார்.

TAGS: