தந்தையை சுட்டுக் கொன்ற 4 வயது பாசக்கார மகன்!

சவுதி அரேபியாவில் வீடியோ கேம் வாங்கித் தராத தனது தந்தையை நான்கு வயது மகன் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சவுதி அரேபியாவின் தெற்கு ஜிசான் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக அந்நாட்டு அஸ்ராக் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. தந்தையிடம் பல நாட்களாக வீடியோ கேம் வாங்கித் தருமாறு நச்சரித்து கொண்டிருந்த அச்சிறுவன் அலுவலகம் சென்ற தந்தை வெறும் கையுடன் வந்ததை பார்த்து கோபமடைந்துள்ளான். தந்தை உடை மாற்றும் போது கீழே வைத்த அவரது துப்பாக்கியை எடுத்து அவரை சுட்டுள்ளான். இதில் தலையில் குண்டு பாய்ந்ததை அடுத்து சிறுவனின் தந்தை சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.