உண்ணாவிரதமிருக்க முடியுமா? ராமதாஸ் கருணாநிதிக்கு சவால்!

தமிழீழம் பற்றி பேசிவரும் திமுக தலைவர் கருணாநிதி முடிந்தால் தனி ஈழம் வேண்டும் என்ற கோரிக்கையுடன் புதுடில்லியில் உண்ணாவிரதமிருக்கட்டும் பார்க்கலாம் என பாமக நிறுவனர் டாக்டர் ரமாதாஸ் சவால் விடுத்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும், கருணாநிதி எப்போதும் எதிர்க்கட்சியாக இருக்கும் போது தமிழ் ஈழத்தை பற்றி பேசுவார். 18 எம்.பிக்களை வைத்துள்ள கருணாநிதி துணிச்சல் இருந்தால் புதுடில்லிக்கு சென்று உண்ணாவிரதம் இருக்கட்டும் என தெரிவித்தார்.

இலங்கை மக்களின் அவலத்தை முன்வைத்து தமிழ் நாட்டில் அரசியல் நாடகம் நடத்தும் மற்ற அரசியல்வாதிகளை விஞ்சும் வகையில் ஈழம் கிடைத்த பின்பே உயிர் துறக்கப்போவதாகக் கூறியுள்ள கருணாநிதியை நோக்கி இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார் இந்த ராம்தாஸ்.

தமிழகத்தில் ஜாதி கட்சி நடத்தும் அரசியல்வாதியாகவும் ஓட்டுக்காக கட்சிவிட்டு கட்சித் தாவும் அரசியல்வாதியாகவும் உள்ள ராமதாஸ் இவ்வாறு பேசியதில் எந்த ஆச்சரியமுமில்லை என்கிறது திமுக வட்டாராம்.