விடுதலைப் புலிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம் கண்டுபிடிப்பு

இலங்கை வான்பரப்பில் 1998-ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பினால் சுட்டு வீழ்த்தப்பட்ட இலங்கை அரசுக்கு சொந்தமான ‘லயன் எயார்’ விமானத்தின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி ஒருவர் வழங்கிய தகவல்களுக்கு அமைய இந்த விமானத்தை கண்டுபிடிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இலங்கையின் வடக்கே இரணை தீவு கடற்பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் எச்சங்களை தேடும் நடவடிக்கையில் இலங்கையின் கடற்படை சுழியோடிகளால் ஈடுபட்டனர்.

இரண்டு இறக்கைகள், மூன்று சக்கரங்கள், விமான இயந்திரம், உடற்பகுதியின் முன் பக்கம் ஆகியவற்றின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பலாலியில் இருந்த புறப்பட்ட 10 நிமிடங்களில் சுட்டு வீழ்த்தப்பட்ட லயன் எயர்- 602 விமானத்தில் பயணம் செய்த 48 பேர் இத் தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS: