விளையாட்டுத்துறையில் வெற்றியை ஊக்குவிக்க மலேசியா பெரும்பணம் செலவிடுகிறது

இவ்வாண்டு முற்பகுதியில் லண்டனில் முதலாவது ஒலிம்பிக் தங்கப் பதக்கம் பெறுவது மீண்டும் மயிரிழையில் தப்பிப்போனதை அடுத்து மலேசியா விளையாட்டுத்துறையை ஊக்குவிக்க 2013-இல் ரிம 187.2 மில்லியன் செலவிடத் திட்டமிட்டுள்ளது.

“அதிகம் செலவிடுவது பெரிதல்ல. ஆனால், செலவிடும் பணம் விளையாட்டுத் துறையில் வெற்றியை உறுதிப்படுத்த வேண்டும்”, என்று இளைஞர் விளையாட்டு அமைச்சர் அஹ்மட் சபரி சிக் கூறியதாக த ஸ்டார் நாளேடு அறிவித்துள்ளது.

முந்திய ஆண்டுகளில் ஒதுக்கப்பட்டதைக் காட்டிலும் கூடுதல் தொகை அடுத்த ஆண்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் ரிம8.5 மில்லியன் ஈராண்டுக்கொரு முறை 21-வயதுக்குக் குறைந்த விளையாட்டாளர்களுக்காக நடத்தப்படும் மலேசிய விளையாட்டுகளுக்குச் செலவிடப்படும். அவ்விளையாட்டுகள் அடுத்த ஆண்டு ஜூன், ஜூலையில் கோலாலும்பூரில் நடைபெறும்.

விளையாட்டுத் துறைக்குக் கூடுதல் நிதி ஒதுக்குவதன்வழி எதிர்வரும் தேர்தலில் இளம் வாக்காளர்களின் ஆதரவைப் பெறுவதும் அரசாங்கத்தின் நோக்கமாகும்.

-ராய்ட்டர்ஸ்

TAGS: