ஹரி ராயா ஐடில்பித்ரி கொண்டாட்டத்துடன் இணைந்து, நெடுஞ்சாலைகளில் வகுப்பு 1 தனியார் வாகனங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு ஏப்ரல் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு நாள் கட்டணமில்லா காலத்தை அரசாங்கம் அங்கீகரித்துள்ளது. தேசிய எல்லைகளில் உள்ள சுல்தான் இஸ்கந்தர் கட்டிடம் சுங்கச்சாவடி (Sultan Iskandar Building Toll) மற்றும்…
தடுப்பூசியை முழுமையாகப் பெற்றவர்களுக்கான வழிகாட்டுதல்கள் ஆகஸ்டில் அறிவிக்கப்படும்
இரண்டு மருந்தளவுகள் கோவிட் -19 தடுப்பூசி பெற்றவர்களுக்கான வழிகாட்டுதல்களை அரசு விரைவில் வெளியிடும் என்று கைரி ஜமாலுதீன் தெரிவித்தார். இரண்டு மருந்தளவுகள் தடுப்பூசி பெற்றவர்கள் மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். "இருப்பினும், டெல்டா மாறுபாடு பரவுவதால், நாங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து…
மனிதக் கடத்தல் பிரச்சினையைத் தீர்க்க அரசாங்கம் தவறிவிட்டது – மனித…
அமெரிக்க வெளியுறவுத்துறையின், மனிதக் கடத்தல் அறிக்கை (Trafficking in Persons திஐபி) 2021-இல், 3-வது நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள மலேசியாவின் தரவரிசை குறித்து, ஹக்காம் மனித உரிமை குழு (மனித உரிமைகள் சங்கம்) தனது கவலையை வெளிப்படுத்தியது. திஐபி அறிக்கையில், நிலை 3 என்பது மிகக் குறைந்த மட்டமாகும், மேலும்…
படுக்கை பற்றாக்குறை, தரையில் சிகிச்சை – எச்.கே.எல். இயக்குநர் விளக்கம்
கோவிட் -19 நேர்வுகள் அதிகரித்ததைத் தொடர்ந்து, கோலாலம்பூர் பொது மருத்துவமனையில் (எச்.கே.எல்.) படுக்கைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது, இதன் விளைவாக சில நோயாளிகள் தரையில் சிகிச்சை பெற்றனர் என்று மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ஹெரிக் கோரே தெரிவித்தார். மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்ட பெரும்பாலான நேர்வுகள், கோவிட் -19 நிலை 4…
6,658 புதிய நேர்வுகள், 107 இறப்புகள்
கோவிட் 19 | இன்று நாட்டில், 6,658 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. மேலும், இன்று 107 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 5,434 பேர் பலியாகியுள்ளனர். இதற்கிடையில் இன்று, 5,677 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில்…
சட்ட அமைச்சராக ராய்ஸ் – குவான் எங் முன்மொழிந்தார்
தக்கியுடின்ன் ஹாசனுக்குப் பதிலாகப் பிரதமர் திணைக்களத்தில் (நாடாளுமன்றம் மற்றும் சட்டம்) புதிய அமைச்சராக, ராய்ஸ் யாத்திமை நியமிக்க வேண்டும் என்று டிஏபி பொதுச்செயலாளர் லிம் குவான் எங் பரிந்துரைத்தார். இந்த மாதத்திற்குள், நாடாளுமன்றக் கூட்டத்தொடரை நடத்த அகோங்கின் உத்தரவுக்கு "விசுவாசமும் கீழ்ப்படிதலும்" இருப்பதை உறுதி செய்வதற்காக, மேலவை சபாநாயகரான…
‘பெரும்பாலான முதலாளிகள் வீட்டிலிருந்து வேலை செய்வதை விரும்பவில்லை’
கடந்த ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி நிலவரப்படி, 'தொழிலாளர்களுக்காக பணியாற்றுதல்' (Working for Workers) விண்ணப்பத்தின் மூலம், மனிதவள அமைச்சு பெற்ற மிக அதிகமான புகார்கள், முதலாளிகள் தொழிலாளர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்கவில்லை (பி.டி.ஆர்) என்பதாகும். மனிதவளத் துணை அமைச்சர் அவாங் ஹாஷிம் கூறுகையில், நாடு முழுவதும்…
5 மாநிலங்கள் மீட்பு திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்குள் நுழைந்தன
தேசிய மீட்புத் திட்டத்தின் (பிபிஎன்) கீழ், கட்டம் 2-ற்கான மூன்று நடமாட்டக் கட்டுப்பாட்டு வாசல் மதிப்புகளையும் ஐந்து மாநிலங்கள் வெற்றிகரமாக அடைந்துள்ளதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. ஜூலை 5-ஆம் தேதி தொடங்கி, பெர்லிஸ், கிளந்தான், திரெங்கானு, பஹாங் மற்றும் பேராக் ஆகிய ஐந்து மாநிலங்களும் 2-ஆம் கட்டத்திற்குள்…
அமைச்சர் : பி.கே.பி.டி. பகுதிகளில் அனைத்து கட்டுமானப் பணிகளும் நிறுத்தப்படுகின்றன
சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் உள்ள பி.கே.பி.டி. பகுதிகளில், கட்டுமானம் மற்றும் அது தொடர்புடைய அனைத்து பணிகளும் நிறுத்தப்பட வேண்டும் என்று பொதுப்பணித் துறை அமைச்சர் ஃபடில்லா யூசோஃப் தெரிவித்தார். "இதன் பொருள் என்னவென்றால், முன்னதாகப் பெறப்பட்ட மிட்டியின் அனுமதி கடிதத்தை, பி.கே.பி.டி. காலத்தில் கட்டுமானப் பணிகளைத் தொடரப் பயன்படுத்த…
கிள்ளான் பள்ளத்தாக்கில் வெற்று படுக்கைகளுக்காக காத்திருக்கும் நோயாளிகள்
கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள மருத்துவமனைகளில், கோவிட் -19 அவசரச் சிகிச்சைப் பிரிவுக்கான படுக்கைகள் கடும் அழுத்தத்தில் உள்ளன. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், சுகாதார ஊழியர்கள் அவசரச் சிகிச்சைப் பிரிவிப் பகுதியின் தரையில் நோயாளிகளைக் கிடத்தி, மருத்து நடைமுறையில் ஈடுபடும் மற்றும் படுக்கைகளுக்காக காத்திருக்கும் நோயாளிகளைக் காட்டும் படங்கள்…
சினி ஏரியின் யுனேஸ்கோ இருப்பு நிலை மறுஆய்வு செய்யப்படுகிறது
ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் (யுனெஸ்கோ) உயிர்க்கோள இருப்புநிலையாக, சினி ஏரியின் நிலை அவ்வப்போது மதிப்பிடப்படுகிறது, மேலும் அதன் நிலையை நிலைநிறுத்துவதற்கான பரிந்துரைகளைச் செயல்படுத்த அரசாங்கத்திற்கு ஒரு வருடத்திற்கும் குறைவான கால அவகாசம் உள்ளது. கடந்த மே 18-ம் தேதி, பூர்வாங்கத் திட்டங்களின் பட்டியல்,…
புதியக் கோவிட் -19 நேர்வுகளுக்குக் காரணம் தொழிற்சாலைகள் அல்ல –…
கோவிட் -19 பரவுவதைத் தடுப்பதற்காக, தொழிற்சாலைகள் மூடப்பட வேண்டும் என்ற அழைப்பில் சர்வதேச வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் மொஹமட் அஸ்மின் அலி உடன்படவில்லை. நேற்றிரவு, கீச்சகப் பயனர் @ravin_surandran, ஆதரித்து, புதிய கோவிட் -19 நேர்வுகளில் பெரும்பாலானவை, "சீரற்ற" பரவலின் விளைவாகும், தொழிற்சாலையிலிருந்து அல்ல என்று அஸ்மின்…
அசைபட வழக்கு : கேலிச்சித்திர ஓவியர் அமீன் லண்டக், ஃப்ரீடம்ஃபில்ம்ஃபெஸ்ட்…
தனது இரண்டு நண்பர்களுடன், போலீஸ் காவலில் இருந்தபோது சித்திரவதைச் செய்யப்பட்டதாகக் கூறிய ஓர் இளையரின் சாட்சியத்தின் அடிப்படையில், நான்கு நிமிட அசைபடம் (அனிமேஷன்) ஒன்றை ஒளிபரப்பியது தொடர்பாக இருவரைப் போலீசார் விசாரணை செய்கின்றனர். ஃப்ரீடம் ஃபிலிம் நெட்வொர்க் (எஃப்.எஃப்.என்.) [Freedom Film Network (FFN)] - வருடாந்திர மனித…
சுரங்க நிறுவன வழக்கு : RM550,000 செலுத்த மலேசியாகினிக்கு ஃபெடரல்…
ரவுப் ஆஸ்திரேலியத் தங்க சுரங்கம் (ஆர்.எ.ஜி.எம்.) தொடர்ந்த அவதூறு வழக்கை அனுமதித்த முந்தைய கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, மலேசியாகினி செய்த மேல்முறையீட்டை ஃபெடரல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. [caption id="attachment_192168" align="aligncenter" width="2554"] இந்த முடிவோடு, மலேசியாகினிக்கு RM550,000 இழப்பீடு மற்றும் செலவுகளைச் செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டது…
ஒப்பந்த மருத்துவர்களின் ஹர்த்தால் சுகாதாரச் சேவைகளைப் பாதிக்காது – ஏற்பாட்டாளர்கள்
‘ஒரு நாள் சேவை செய்வதில்லை’ எனும் அவர்களின் திட்டம் சுகாதாரச் சேவைகளைப் பாதிக்காது என்று ஹர்த்தால் ஏற்பாட்டாளர்கள் உறுதியளித்தனர். ஏனென்றால், அவர்களின் பணியைக் கையாளக்கூடியப் பிற மருத்துவ அதிகாரிகள் அவர்களுக்கு உதவுவார்கள் என்று அக்குழுவின் செய்தித் தொடர்பாளர் டாக்டர் முஸ்தபா கமால் அஜீஸ் தெரிவித்தார். அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான…
நேற்றைய நிலவரப்படி 2,309,018 பேர் இரண்டாவது மருந்தளவை நிறைவு செய்தனர்
தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் கீழ், நாட்டில் இதுவரை மொத்தம் 8,083,685 மருந்தளவு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதாம் பாபா தெரிவித்தார். இந்த எண்ணிக்கையில், முதல் மருந்தளவை 5,774,667 பேரும், 2,309,018 பேர் இரண்டாவது மருந்தளவையும் பெற்றுள்ளனர், இதன்வழி அவர்களின் தடுப்பூசி நிறைவடைந்துள்ளது. "மொத்தம்…
கிளேன்மேரி சம்பவம் : ‘மண்டியிட்டிருந்த போது அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்’…
நவம்பர் 13, 2010 அன்று, ஷா ஆலம், க்ளென்மேரியில் முஹம்மது ஷாமில் ஹஃபீஸ் ஷாபீ, 15, மொஹமட் ஹய்ருல் நிஸாம் துவா, 22, மற்றும் முகமது ஹனாஃபி ஒமார், 21, ஆகியோர் போலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆரம்பத்தில், மான்தெராஸ் மற்றும் புக்கிட் சுபாங்கில் பெட்ரோல் நிலைய கியோஸ்க்களைக் கொள்ளையடிக்க…
சிலாங்கூரில் பெரும்பாலான கோவிட் -19 திரளைகள் தொழிற்சாலை சார்ந்தவை –…
சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருட்டின் ஷாரி, மாநிலத்தில் கோவிட் -19 தொற்றின் கிட்டத்தட்ட அனைத்து திரளைகளும் பணியிடம் சார்ந்தவை என்றும், அது சுகாதார அமைச்சின் தரவுகளுக்கு முரணாக தோன்றுகிறது என்றும் கூறினார். மாநிலத்தில் கோவிட் -19 தொற்றுகளில் பெரும்பாலானவைக், குறிப்பாக தொழிற்சாலை சார்ந்த பணியிடத்திலிருந்து வந்தவை என்ற அமிருட்டின்,…
ஆதாம்: ஒப்பந்த மருத்துவர்களின் கோரிக்கை அமைச்சரவைக்குக் கொண்டு வரப்படும்
சிறந்த மற்றும் பாதுகாப்பான தொழில் வாய்ப்புகளை விரும்பும் சுகாதார அமைச்சின் ஒப்பந்த மருத்துவ ஊழியர்களின் கோரிக்கைகளை அமைச்சரவை விவாதிக்கும். இந்த விவகாரம் தொடர்பாக அரசாங்கம் விரைவில் ஒரு முடிவை எடுக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாகச் சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதாம் பாபா தெரிவித்தார். எனவே, சம்பந்தப்பட்ட அனைத்து ஊழியர்களையும்…
ஆகஸ்ட் 1-க்கு முன்னதாக நாடாளுமன்றச் சிறப்பு கூட்டம் – சபாநாயகர்கள்…
மக்களவை சபாநாயகர் அஸார் ஹருண் மற்றும் மேலவை சபாநாயகர் ரைஸ் யாதிம் இருவரும், ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னதாக, நாடாளுமன்றச் சிறப்பு அமர்வு நடத்தப்பட வேண்டும் என்று பிரதமர் முஹைதீன் யாசினுக்குப் பரிந்துரைத்துள்ளதாகக் கூறினார். நேற்று இஸ்தானா நெகாராவில், யாங் டி-பெர்த்துவான் அகோங், அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் முஸ்தபா பில்லா…
வயிற்றுப்போக்கு காரணமாக பிரதமர் மருத்துவமனையில் அனுமதி
வயிற்றுப்போக்கு காரணமாக, பிரதமர் முஹைதீன் யாசின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இத்தகவலைப் பிரதமர் அலுவலகம், இன்று காலை ஒரு சுருக்கமான அறிக்கையில் தெரிவித்தது. "பிரதமர், நேற்று முதல் வயிற்றுப்போக்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை பிரதமர் அலுவலகம் தெரிவிக்க விரும்புகிறது. "இதன் விளைவாக, அவர் சிகிச்சை மற்றும் கண்காணிப்புக்காக, இன்று காலை…
கைரி : 400-க்கும் மேற்பட்ட நாடாளுமன்றப் பணியாளர்கள் தடுப்பூசி பெறத்…
400-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற ஊழியர்களுக்கான தடுப்பூசி செயல்முறை, தலைநகரைச் சுற்றியுள்ள பல தடுப்பூசி மையங்களில் (பிபிவி) இன்று தொடங்கியது என்று தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்ட ஒருங்கிணைப்பு அமைச்சர் (பிக்) கைரி ஜமாலுதீன் தெரிவித்தார். மக்களவை, மேலவை அமர்வுகள் விரைவில் நடைபெறச் செய்வதற்கான முயற்சிகளில் இதுவும் அடங்கும்…
ஆட்சியாளர்கள் மாநாடு – அக்டோபருக்கு ஒத்திவைக்கப்பட்டது
நாளை முதல் இரண்டு நாட்கள் நடைபெறவிருந்த, மலாய் ஆட்சியாளர் மன்றக் கூட்டம் அக்டோபர் 27ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டதாக ஆட்சியாளர்களின் முத்திரை காப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஜூன் 28-ம் தேதி, மந்திரி பெசார் மற்றும் முதலமைச்சருடனான சந்திப்புகளும், ஜூன் 29 அன்று நடந்த ஆட்சியாளர்கள் கூட்டத்துடன் இணைந்து, சபைக்கு…
தொற்றுநோய் மோசமடைந்து வருவதாக அறிகுறிகள்
"முழு நடமாட்டக் கட்டுப்பாடு" ஒரு மாதத்திற்கு நீடித்திருந்தாலும், நாட்டில் கோவிட் -19 தொற்று பரவலின் நிலை மோசமடைந்து வருவதாக பல அறிகுறிகள் காட்டுகின்றன. ஜூன் 1 முதல் அமலில் இருக்கும் முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பிகேபி), ஆரம்பக் கட்டத்தில் நேர்வுகள் அதிகரிப்பதைத் தடுத்தது, ஆனால் அதன் பின்னர்,…