ஜூன் 1 முதல் வேலை பயணத்திற்கான மிட்டியின் அனுமதி கடிதம்…

சர்வதேச வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சு (மிட்டி) வழங்கியப் பணிக்கான பயண அனுமதி கடிதம், ஜூன் 1 முதல் இரத்து செய்யப்படும். மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) இஸ்மாயில் சப்ரி யாகோப், இனி அந்தந்த வேலை சம்பந்தப்பட்ட அமைச்சின் பயண அனுமதி கடிதம் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றார். “அவர்கள்…

‘முழு கதவடைப்பு’ எஸ்.ஓ.பி. : நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது…

அடுத்த செவ்வாய்க்கிழமை (ஜூன் 1) முதல், நடைமுறைக்கு ‘முழு கதவடைப்பு'-கான செந்தர இயங்குதல் நடைமுறைகளை (எஸ்ஓபி) மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) இஸ்மாயில் சப்ரி யாகோப் இன்று கோடிட்டுக் காட்டினார். இது பெரும்பாலும், கடந்த ஆண்டு மார்ச் மாதம், முதல் நடமாட்டுக் கட்டுப்பாட்டு ஆணையில் (பி.கே.பி 1.0) செயல்படுத்தப்பட்டதை ஒத்திருக்கிறது.…

இன்று 6,999 புதிய நேர்வுகள், 79 மரணங்கள்

கோவிட் 19 | நாட்டில், 6,999 கோவிட் -19 புதிய நேர்வுகள் இன்று பதிவாகியுள்ளதாக சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். சிலாங்கூர் 2,477 நேர்வுகளுடன் இன்னும் முதல் இடத்தில் உள்ளது. இதற்கிடையில், இன்று 79 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம்…

தம்பதிகள் சந்திக்க மாநில, மாவட்ட எல்லைகளைக் கடக்க அனுமதி இல்லை

முதல் கட்ட, முழு கதவடைப்பு காலகட்டத்தில், பிரிந்திருக்கும் தம்பதிகள் சந்திப்பதற்கான மாநில, மாவட்ட எல்லைகளைக் கடக்கும் அனுமதி இல்லை என்று மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார். ஜூன் 1 முதல், மாவட்டங்களுக்கு இடையிலான பணி அனுமதி கடிதங்களைச் சம்பந்தப்பட்ட அமைச்சுகள் மட்டுமே வழங்கும் என்றார்…

மக்கள் தடுப்பூசிகளைத் தேர்வு செய்ய முடியாது – அரசாங்கம் முடிவு

பொதுமக்களுக்கு அவர்கள் பெறும் தடுப்பூசியைத் தேர்ந்தெடுப்பதற்கான விருப்பத்தை வழங்க வேண்டாம் என்று அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகத் தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்புத் திட்ட ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்துள்ளார். மைசெஜாத்தெரா விண்ணப்பத்தின் மூலம் பொதுமக்கள் தடுப்பூசியைத் தேர்வு செய்ய அனுமதிப்பது குறித்து, அரசாங்கம் பரிசீலித்து வருவதாகக் கைரி…

பி.எஸ்.எம். : வெளிநாட்டினருக்குப் பொது மன்னிப்பு திட்டத்தைச் செயல்படுத்துக

முழு நடமாட்டக் கட்டுப்பாட்டின் போது, முறையான ஆவணம் இல்லாத வெளிநாட்டினரைத் தடுத்து வைக்கும் திட்டத்தைக் குடிநுழைவுத் திணைக்களம் இரத்து செய்ய வேண்டுமென, மலேசியச் சோசலிசக் கட்சியின் (பிஎஸ்எம்) மத்தியச் செயற்குழு உறுப்பினர் ஒருவர் உள்துறை அமைச்சர் ஹம்ஸா ஜைனுடினைக் கேட்டுக்கொண்டார். தடுத்து வைப்பதைவிட, அவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்குவது…

அகோங்கை அவமதித்தனர், உறுப்பினர்களின் அறிக்கைகள் கட்சியின் நிலைப்பாடு அல்ல –…

மாட்சிமை தங்கியப் பேரரசரை அவமதித்ததாக, தற்போது விசாரிக்கப்பட்டு வரும் பி.கே.ஆர். உறுப்பினர் இஸ்வர்டி மோர்னியின் அறிக்கை, கட்சியின் நிலைப்பாட்டைச் சிறிதும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்று அதன் தகவல் தொடர்புப் பிரிவு இயக்குநர் பாஹ்மி ஃபட்ஸில் தெரிவித்தார். இஸ்வர்டி, சரவாக், பெட்ரா ஜெயா கிளையில் பதிவு செய்யப்பட்ட பி.கே.ஆர். உறுப்பினர் என்பதை…

‘மலாய்க்காரர் அல்லாதவர் ஏஜி ஆவது சாத்தியமற்றது அல்ல’

இந்த நாட்டில் சட்டத்துறை தலைவராக நியமிக்கப்பட்ட முதல் மலாய்க்காரர் அல்லாத தோமி தாமஸ், எதிர்காலத்தில் இதுபோன்ற நியமனங்களை மலேசியா எதிர்பார்க்கலாம் என்று நம்பிக்கை தெரிவித்தார். இருப்பினும், தாமஸ் ஆஸ்ட்ரோ அவானிக்கு அளித்த பேட்டியில், அதை நடைமுறைபடுத்துவது அரசியல் தலைவர்களைப் பொறுத்தது என்றார். “உங்கள் கேள்விக்குப் பதில், ‘நான் சிறந்த…

மஇகா தேசியத் தலைவர் ச விக்னேசுவரனுக்கு உலகத் தமிழர் பாதுகாப்பு…

10-வது மஇகா தேசியத் தலைவராக, மீண்டும் போட்டியின்றி தேர்வு பெற்ற விக்னேசுவரன் சன்னாசி அவர்களுக்கு உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் தமது வாழ்த்துக்களைப் பதிவு செய்வதாக அதன் ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார் மலேசியத் தமிழினத்தின் தாய் கட்சியான மஇகாவின் அடிமட்ட தொண்டனாக தனது அரசியல் பயணத்தைத் தொடங்கி,…

இன்று 9,020 புதிய நேர்வுகள், 98 மரணங்கள்

கோவிட் 19 | இன்று நாட்டில், 9,020 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. இதற்கிடையில், இன்று 98 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 2,650 பேர் பலியாகியுள்ளனர். இன்று 5,527 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 844…

ஜூன் 1 முதல், நாடு முழுவதும் 800-க்கும் மேற்பட்ட சாலைத்…

ஜூன் 1 முதல், முழு கதவடைப்பு அமலாக்கத்தில் இருக்கும் போது, நாடு முழுவதும் சாலைத் தடைகளின் எண்ணிக்கை (எஸ்.ஜே.ஆர்.) 800-க்கும் அதிகமாக அதிகரிக்கும் என்று உள்துறை அமைச்சர் ஹம்சா ஜைனுடின் தெரிவித்தார், தற்போது கிட்டத்தட்ட 600 சாலைத் தடைகள் நாட்டில் போடப்பட்டுள்ளன. குடிநுழைவுத் துறை, மலேசியக் கடல்சார் அமலாக்க…

7 நிபந்தனைகளுடன் பி.எச். ‘முழு கதவடைப்பை’ ஆதரிக்கிறது

ஜூன் 1 முதல், 14 நாட்களுக்கு நாடு முழுவதும் முழு கதவடைப்பைச் செயல்படுத்த, அரசாங்கம் எடுத்த முடிவைப் பக்காத்தான் ஹராப்பான் ஆதரிக்கிறது. பி.எச். வாழ்க்கைச் செலவினச் செயற்குழு, அரசாங்கத்திற்கு ஏழு நிபந்தனைகளை விதிப்பதன் மூலம் இந்த ஆதரவு வழங்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது. ஏழு நிபந்தனைகளில் மூன்று என்னவென்றால், பி40 மற்றும்…

செலாயாங் தினசரி சந்தை வர்த்தகர்களுக்கு இலவச வாடகை

கோலாலம்பூர், செலாயாங் தினசரி சந்தையில் உள்ள வர்த்தகர்களின் சுமையை குறைக்க, இந்த ஆண்டு இறுதி வரை இலவச வாடகை வசதிகள் வழங்கப்படும் என்று கூட்டரசுப் பிரதேச அமைச்சர் அன்னுவார் மூசா தெரிவித்தார். செவ்வாய்க்கிழமை முதல், சந்தையின் புதியக் கட்டிடத்தில் செயல்படத் தொடங்கும் வர்த்தகர்களுக்கும் இந்தத் தளர்வு வழங்கப்படும். "வாடகை…

கடன் ஒத்திவைப்பு, சிறப்பு உதவிகளை விரைவுபடுத்துக – அரசாங்கத்திற்கு வலியுறுத்து

நேற்று இரவு, 'முழு கதவடைப்பு' அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மக்களுக்கு வங்கி கடன்களை ஒத்தி வைத்தல் (மொரதோரியம்) உட்பட சிறப்பு உதவித் தொகுதிகளை விரைவில் அறிவிக்குமாறு அம்னோ, அமானா மற்றும் பி.கே.ஆர். கட்சிகளின் இளைஞர் பிரிவுத் தலைவர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தினர் அந்த அழைப்பை மீண்டும் வலியுறுத்திய அம்னோ இளைஞர் தலைவர்,…

தடுப்புக் காவலில் மரணமடைந்த இளைஞர் குறித்து விசாரிக்கவும் – என்.ஜி.ஓ.க்கள்…

நேற்று, தடுப்புக் காவலில் இறந்ததாகக் கூறப்படும் சுரேந்திரன் ஷங்கரின் மரணம் குறித்து, கொரோனர் நீதிமன்றத்தால் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தடுப்புக் காவல் மரணம் மற்றும் சித்திரவதையை ஒழியுங்கள் (எடிக்ட்) தன்னார்வத் தொண்டு நிறுவனம் அழைப்பு விடுத்தது. "தடுப்புக் காவல் மரணங்கள் அடிக்கடி நிகழ்வது குறித்து அரசாங்கம் கண்டுக்கொள்ளாமல்,…

ஜூன் 1 தொடக்கம், 14 நாட்களுக்கு நாட்டில் ‘முழு கதவடைப்பு’

ஜூன் 1 முதல் இரண்டு வாரங்களுக்கு, சமூக மற்றும் பொருளாதாரத் துறைகளின் முழு கதவடைப்பு நாடு முழுவதும் செயல்படுத்தப்படும். இத்தகவலை, பிரதமர் அலுவலகம் சற்று முன்னர் ஓர் ஊடக அறிக்கையில் தெரிவித்தது. "இன்று பிற்பகல், பிரதமரின் தலைமையில் கோவிட் -19 மேலாண்மை குறித்த தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் (எம்.கே.என்)…

இன்று 8,290 புதிய நேர்வுகள், 61 மரணங்கள்

கோவிட் 19 | இன்று நாட்டில், 8,290 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. புதிய நேர்வுகளின் எண்ணிக்கை 8,000-ஐ தாண்டுவது இதுவே முதல் முறை. மூன்று நாட்களாக எண்ணிக்கை 7,000-இல் இருந்ததை அடுத்து, இன்று அது 8,000-ஐ தாண்டியுள்ளது. இதற்கிடையில், இன்று 61…

சிம்பாங் ரெங்கம் சிறையில் சுரேந்திரன் மரணம்

மலேசியத் தடுப்புக்காவல் மரணங்களின் பட்டியலில், ஆக அண்மையப் புள்ளிவிவரமாக 21 வயதான சுரேந்திரன் ஷங்கர் இணைந்தார். போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அந்த இளைஞன், சிம்பாங் ரெங்கம் சிறைக்கு மாற்றப்பட்ட ஒரு மாதத்திற்குள், நேற்று முந்தினம் (26 மே) காலை, குளுவாங் மருத்துவமனையில் இறந்து போனார். சுரேந்திரன் ஷங்கரின்…

எம்.ஏ.சி.சி.யால் தாஜுட்டின் கைது, ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்

நேற்று, பாசீர் சாலாக் எம்.பி. தாஜுட்டின் அப்துல் இரஹ்மானைக் கைது செய்த மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.), வாய்வழி ஜாமீனில் அவரை விடுவித்ததாக ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், தாஜுட்டின் கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு எம்.ஏ.சி.சி. எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. இன்று அம்னோ…

முழுமையான பி.கே.பி. – அமல்படுத்துமாறு முஹைதீனுக்கு அம்னோ வலியுறுத்து

சமீபத்திய வாரங்களில் மோசமடைந்து வரும் கோவிட் -19 பரவலைக் கையாள்வதில் முழு அடைப்பு உத்தரவை அமல்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்று இரண்டு அம்னோ தலைவர்கள் பரிந்துரைத்தனர். அந்தக் காலகட்டத்தில், மக்களுக்குச் சிறப்பு நிதி உதவியுடன், 21 நாட்களுக்கு இது செயல்படுத்தப்பட வேண்டும் என்று அம்னோ இளைஞர்கள்…

ஜி.எல்.சி.களில் அரசியல் நியமனங்களைத் தவிர்த்தால், நாடு அதிகம் சேமிக்கலாம் –…

அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட நிறுவனங்களில் (ஜி.எல்.சி.) நிர்வாகமற்ற பதவிகளுக்கு, அரசாங்கம் அரசியல்வாதிகளை நியமிக்காவிட்டால் நாடு பெரும் சேமிப்பைச் செய்ய முடியும். சம்பந்தப்பட்ட ஜி.எல்.சி.க்கள், அரசியல் தலையீடு தேவையில்லாமல் திறமையான ஊழியர்களுடன் தொழில் ரீதியாக செயல்பட முடியும் என்று பாசீர் கூடாங் எம்.பி. ஹசான் அப்துல் கரீம் கூறினார். அதே நேரத்தில்,…

கோவிட் -19 : கிளந்தானில் 1,000-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்குத் தொற்று

கிளந்தானில், 5,921 கோவிட் -19 நோயாளிகளில், 1,078 அல்லது 18 விழுக்காட்டினர் 12 வயது அல்லது அதற்கும் கீழ்ப்பட்ட குழந்தைகள் என்று உள்ளூராட்சி, வீட்டுவசதி மற்றும் சுகாதாரக் குழுத் தலைவர் டாக்டர் இசானி ஹுசின் தெரிவித்தார். அதிக எண்ணிக்கையைப் பதிவிட்ட மாவட்டங்களில், கோத்தா பாரு (517), பாசீர் மாஸ்…

இன்று 7,857 புதிய நேர்வுகள் , 59 மரணங்கள்

கோவிட் 19 | நாட்டில் கோவிட் -19 பரவல் சிறந்த அறிகுறிகளைக் காட்டவில்லை. இன்று 7,857 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இது அந்நோய்த் தொற்றின் அதிகபட்ச தினசரி எண்ணிக்கையாகும். கடந்த 14 நாட்களாக, சராசரி தினசரி நேர்வுகள் 5,778 -ஆகப் பதிவாகியுள்ளது. இதற்கிடையில், இன்று…