இன்று 3,551 புதிய நேர்வுகள், 19 மரணங்கள்

கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரையில், 3,551 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளன. மேலும், இன்று 19 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. தேசியக் கோவிட் -19 இறப்பு எண்ணிக்கை தற்போது 1,610 ஆக உள்ளது. இன்றையப் புதிய இறப்புகள் சரவாக் (5), சிலாங்கூர் (3), ஜொகூர்…

காவலில் தாக்கப்பட்டார் – குடும்பத்தார் குற்றச்சாட்டு, போலிசார் மறுப்பு

ஒரு வாகன உபரிபாகங்கள் கடை உரிமையாளர், காவலில் போலீசாரால் தாக்கப்பட்டதாகவும் இப்போது அவரைப் பார்க்க யாரையும் அனுமதிக்கவில்லை என்றும் அவரது குடும்பத்தார் குற்றஞ்சாட்டியுள்ளனர். இருப்பினும், செந்தூல் மாவட்டக் காவல்துறைத் தலைவர் பே எங் லாய் அக்குற்றச்சாட்டுகளை மறுத்தார், மேலும் கைதிக்குச் சட்டப்பூர்வ அணுகலை மறுக்க தனக்கு சட்ட காரணங்கள்…

இலங்கை, வங்காளதேசம், நேபாளம் மற்றும் பாக்கிஸ்தான் மக்கள் நாட்டில் நுழைய…

இந்தியாவிலிருந்து கோவிட் -19 வேரியண்ட் (மாறுபாடு) (பி.1.617) பரவுவது குறித்த கவலைகள் காரணமாக இலங்கை, வங்காளதேசம், நேபாளம் மற்றும் பாக்கிஸ்தான் குடிமக்கள் நாட்டிற்குள் நுழைவதை மலேசிய அரசாங்கம் தடை செய்துள்ளது. பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப், இந்த நடவடிக்கை ஏப்ரல் 28-ம் தேதி அறிவிக்கப்பட்ட இந்தியாவுக்கான விமானத்…

ஜொகூரில் மூன்று மாவட்டங்கள், கே.எல். முழுவதும் பி.கே.பி.

கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேசம் மற்றும் ஜொகூர், பேராக் மற்றும் திரெங்கானு மாநிலங்களின் சில மாவட்டங்களில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை (பி.கே.பி) செயல்படுத்த அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது. இந்தப் பி.கே.பி., மே 7 தொடங்கி மே 20 வரை அமலில் இருக்கும் என்று மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) இஸ்மாயில் சப்ரி…

இன்று 3,744 புதிய நேர்வுகள், 17 மரணங்கள்

கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரையில், 3,744 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளன. மேலும், இன்று 17 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் 1,591 பேர் பலியாகியுள்ளனர். சிலாங்கூர் (9), சரவாக் (2), பேராக் (2), நெகிரி செம்பிலான் (1), கிளந்தான் (1)…

சிலாங்கூரில் அனைத்து பள்ளிகளும் நாளை முதல் மூடப்படும்

சிலாங்கூரில் உள்ள அனைத்து பள்ளிகளும், அட்டவணையிடப்பட்டதற்கு முன்னதாக நாளை தொடங்கி மூடப்படும். சிலாங்கூர் கல்வித் துறை இன்று வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி, ஹரி ராயா விடுமுறை வரையில் பள்ளிகள் மூடப்பட்டிருக்கும். "2021 மே 6 முதல் மே 12 வரை பள்ளிகளை மூட வேண்டுமென, இன்று நடந்த சிலாங்கூர் சிறப்பு…

பி.எச். : பி.கே.பி.யின் கீழுள்ள சிலாங்கூர் பள்ளிகளின் எஸ்ஓபியை அறிவியுங்கள்

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் (பி.கே.பி) கீழ் உள்ள சிலாங்கூர் பள்ளிகளுக்கான செந்தர இயங்குதல் நடைமுறைகளை (எஸ்ஓபி) உடனடியாக விவரிக்க வேண்டும் என்று பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) தேசியக் கூட்டணி (பிஎன்) அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டது. சிலாங்கூரில் ஆறு மாவட்டங்கள், நாளை முதல் மே 17 வரை பி.கே.பி.யின் கீழ் வைக்கப்படும்…

இராணுவ வீரர்கள் சங்கம் கட்சி அமைத்து, 50 இடங்களில் போட்டியிட…

மலேசிய ஆயுதப்படை வீரர்கள் சங்கம் (வெதரன்), அடுத்தப் பொதுத் தேர்தலில் (ஜி.இ) போட்டியிட முடிவு செய்துள்ளது. அதன் தலைவர், கேப்டன் ஷாருட்டின் ஒமர் கூறுகையில், இதுவரை எழுப்பப்பட்ட பிரச்சினைகளையும், மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அரசாங்கத்தின் பலவீனத்தையும் அரசாங்கம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று வெதரன் கண்டறிந்ததையடுத்து இந்த முடிவு…

பி.கே.பி. பகுதிகளில் நோன்புப் பெருநாளுக்கு முதல் நாள் மட்டுமே இல்ல…

மே 13-ல் கொண்டாடப்படும் என்று எதிர்பார்க்கப்படும் ஹரி ராயா ஐடில்ஃபிட்ரி பெருநாள் உபசரிப்புகள், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.) பகுதிகளில் முதல் நாள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறுகையில், விருந்தினர்களின் மொத்த வருகை ஒரு நேரத்தில் 15 பேருக்கு மேல் இல்லை,…

பி.கே.பி.பி. மாநிலங்களுக்கு இடையிலான சுற்றுலா அனுமதி இடைநிறுத்தம்

மீட்புநிலை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் (பி.கே.பி.பி) கீழ் உள்ள  மாநிலங்களுக்கு இடையேயான சுற்றுலா நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்படுவதாக மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) இஸ்மாயில் சப்ரி யாகோப் அறிவித்தார். மார்ச் 2020 முதல் கோவிட் -19 தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத் துறைக்கு உதவ, புத்ராஜெயா ஒரு “பசுமை பயணக்…

சுவாராம் : கடந்தாண்டு சிறையில் 8 இறப்புகள் பதிவு

கடந்த ஆண்டு தடுப்புக் காவலில் எட்டு மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, மனித உரிமைகள் தன்னார்வத் தொண்டு நிறுவனமான சுவாரா ரக்யாட் மலேசியா (சுவாராம்) தெரிவித்துள்ளது. 2020, ஏப்ரல் 5-ஆம் தேதி, பஹாங், பெந்தோங் காவல் நிலையத்தில் ஜி ஜெஸ்டஸ் கெவின் என்ற நபர் இறந்து போனார், அதுவே கடந்தாண்டு…

ஷாஹிர் : அம்னோ தலைவர்தான் பிரதமராக வேண்டும் என்ற அவசியமில்லை

அம்னோ தலைவர்தான் பிரதமர் வேட்பாளராக இருக்க வேண்டும் என்ற பாரம்பரியத்தைக் கட்சி இனியும் பிடித்துகொண்டு இருக்க முடியாது என்பது அம்னோ மூத்தத் தலைவர் ஷாஹிர் சமாட் கருத்து தெரிவித்தார். அம்னோவில், இனி ஒரு தனி மனிதன் ஆதிக்கம் செலுத்துவதையும் எல்லாவற்றையும் கட்டுப்படுத்துவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் கூறினார்.…

ஃபாஹ்மிக்கு ஆதரவு, மே 1 பேரணி – போலீசார் அருட்செல்வனை…

மலேசிய சோசலிசக் கட்சியின் (பிஎஸ்எம்) துணைத் தலைவர் எஸ் அருட்செல்வன், மே 1 ஒன்றுகூடலில் கலந்துகொண்டது மற்றும் சமூக ஆர்வலர் ஃபாஹ்மி ரேஸாவுக்கு ஆதரவாக ஒன்றுகூடியது தொடர்பான பிரச்சனைகள் குறித்து விளக்கமளிக்க, டாங் வாங்கி மாவட்டக் காவல் தலைமையகத்திற்கு அழைக்கப்படுவார். தொடர்பு கொண்டபோது, ​​தான் கலந்துகொண்ட இரண்டு பேரணிகள்…

இன்று 3,120 புதிய நேர்வுகள், 23 மரணங்கள்

கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரையில், 3,120 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். டாக்டர் நூர் ஹிஷாம் கருத்துப்படி, கிள்ளான் பள்ளத்தாக்கு 1,083 நேர்வுகளுடன் முதன் நிலையில் உள்ளது. அதனையடுத்து சிலாங்கூரும் கோலாலம்பூரும்…

இன்று 2,500 புதிய நேர்வுகள், 18 மரணங்கள்

கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரையில், 2,500 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளன. அவற்றுள் 4 வெளியிலிருந்து வந்தவை எனச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், இன்று 18 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. ஆக, இதுவரை இந்நோய்க்கு நாட்டில் 1,551 பேர் பலியாகியுள்ளனர். இன்று 2,068…

பி.கே.ஆர். : ஹமீட் படோரின் குற்றச்சாட்டுகளை குறை மதிப்பிட்டு, எம்.ஏ.சி.சி.…

கடந்த வெள்ளிக்கிழமை, பல நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்சித் தாவல் நடவடிக்கைகளுக்குப் பின்னால் ஊழல் நடந்திருக்கிறது என முன்னாள் காவற்படைத் தலைவர் கூறியுள்ளது குறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி) விசாரிக்க வேண்டும் என்று பி.கே.ஆர். இன்று வலியுறுத்தியுள்ளது. பி.கே.ஆர். தலைமை செயலாளர் சைஃபுட்டின் நாசுதியோன் இஸ்மாயில், அப்துல்…

போலிஸ் நேர்மை சிக்கல்கள் : விரைவில் நான் கவனம் செலுத்துவேன்…

புதியத் தேசியக் காவல்துறைத் தலைவர், அக்ரில் சானி அப்துல்லா சானி, பாதுகாப்புப் படையினரின் நேர்மை உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பான தகவல்களை, ஊடகங்களுக்கான ஒரு சிறப்பு அமர்வில் விரைவில் முன்வைக்கவுள்ளதாகத் தெரிவித்தார். தனது முன்னோடி அப்துல் ஹமீட் படோர் எழுப்பியப் போலிஸ் படையின் நேர்மை குறித்து கருத்து கேட்கப்பட்டபோது அவர்…

எம்.பி.எம். : `பள்ளிக்குச் செல்லாமல் போராட்டம்` – கல்வி ஒழுங்குமுறைக்கு…

மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல வேண்டாம் என்று கேட்கும் பிரச்சாரம் கல்வி ஒழுங்குமுறைக்கு எதிரானது, கல்வி நிறுவனங்களை மதிக்க வேண்டும். மலேசிய இளைஞர் பேரவையின் (எம்.பி.எம்.) தலைவர் ஜுஃபித்ரி ஜோஹா, பாலியல் ரீதியான துன்புறுத்தல் பிரச்சினையை எதிர்ப்பதற்கும், பள்ளிகளை மாணவர்களுக்குப் பாதுகாப்பான மற்றும் அமைதியான இடமாக, கிழக்கத்தியப் பழக்கவழக்கங்களுக்கு ஏற்ப…

கணபதியின் மரணம் : தகவல் கொடுப்பவருக்கு RM10,000 வெகுமதி

மறைந்த ஏ கணபதியின் மரணத்திற்குக் காரணமானவர்களைக் கைது செய்ய வழிவகுக்கும் தகவல்களை வழங்குவோருக்கு RM10,000 வெகுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவரின் குடும்ப வழக்கறிஞரான கே கணேஷின் கூற்றுப்படி, இந்தச் சலுகை அடையாளம் கூற மறுத்துவிட்ட ஒரு நபரின் பங்களிப்பாகும். அந்நபரும் இறந்தவரின் ஒத்த சூழ்நிலையை எதிர்கொண்டதாகக் கணேஷ்…

‘உங்கள் தோல்விகளுக்கு மற்றவர்களைக் குறை கூறாதீர்கள், ஐஜிபி’ – ஈங்காட்

இந்திரா காந்தியின் மகள் பிரசானா திக்ஸாவை அவரது முன்னாள் கணவரிடமிருந்து மீட்டுக் கொண்டுவரத் தவறியதற்காக, அப்துல் ஹமீத் படோர் நியாயமற்ற சாக்குகளைச் சொல்லி மற்றவர்களைக் குறை கூறக்கூடாது என்று இந்திரா காந்தி நடவடிக்கை குழு (ஈங்காட்) கூறியுள்ளது. கடந்த திங்கட்கிழமை, தேசியக் காவல்துறைத் தலைவர் பதவியில் இருந்து விலகுவதற்கு…

#புகாபுவாசாபார்லிமென்ட் : 90 பங்கேற்பாளர்களையும் காவல்துறை அழைக்கும்

கோலாலம்பூர், ஜாலான் பார்லிமெனில், நேற்று நடந்த #புகாபுவாசபார்லிமென் (#BukaPuasaParlimen) அமைதி பேரணியில் பங்கேற்ற அனைவரிடமும் போலிசார் வாக்குமூலம் எடுப்பார்கள். அவர்கள் அனைவரும் விரைவில் அழைக்கப்படுவார்கள் என்றும், இதுவரை பேரணியில் பங்கேற்ற 90 பேரைப் போலீசார் அடையாளம் கண்டுள்ளதாகவும் டாங் வாங்கி காவல்துறைத் தலைவர் ஏசிபி மொஹமட் ஜைனல் அப்துல்லா…

சிறையில் கைதிகள் மீது அதிகார அத்துமீறல், குடும்பத்தார் புகார்

சுங்கை ஊடாங் சிறையைச் சார்ந்த 10 கைதிகள், ஜெலெபு சிறையில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டபோது தங்கள் மீது அதிகார அத்துமீறல் நடந்தது என தங்கள் குடும்பத்தாரிடம் தெரிவித்ததை அடுத்து, அவர்தம் குடும்பத்தினர் காவல்துறையில் புகார் பதிவுசெய்தனர். அவர்களின் பிறப்புறுப்பு மற்றும் ஆசனவாய்களில் மிளகு தூள் தெளிக்கப்பட்டதைத் தொடர்ந்து,…

இன்று 2,881 புதிய நேர்வுகள், 15 மரணங்கள்

கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரையில், 2,881 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. புதிய நோய்த்தொற்றுகளில், 1000-க்கும் மேற்பட்டவை கிள்ளான் பள்ளத்தாக்கில் பதிவாகியுள்ளன. புதிய நோய்த்தொற்றுகளில் 90.56 விழுக்காடு மலேசியர்களையும், 9.44 விழுக்காடு அந்நிய நாட்டவரையும் கண்டுள்ளது. இதற்கிடையில், இன்று…