மூன்று வயது சிறுமியின் புறக்கணிப்பு தொடர்பான விசாரணைகளை எளிதாக்குவதற்காகப் போர்ட் டிக்சனின் பண்டார் சுங்காலாவில் உள்ள ஒரு வீட்டில் உள்ளூர் நபரைப் போலீசார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர், போர்ட் டிக்சன் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஐடி ஷாம் முகமது ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 24) போர்ட் டிக்சன் மருத்துவமனையிலிருந்து பாதிக்கப்பட்டவர்…
மே 1, 2021 – பணி உத்தரவாதமே வாழ்க்கைக்கானத் தடுப்பூசி
நாட்டில், இவ்வாண்டு மே தினக் கொண்டாட்டம், பேரணிகள் ஏதுமின்றி அமைதியான முறையில் அனுசரிக்கப்பட்டது. கோவிட்-19 பெருந்தொற்றும் அவசரகாலப் பிரகடனமும் இக்கொண்டாட்டத்தை முழுவதுமாகத் தடைசெய்யவில்லை எனலாம். கோலாலம்பூர், பேராக், ஜொகூர், நெகிரி செம்பிலான் மாநிலங்களில், சிறிய அளவிலான குழுவினர் ஒன்றுகூடி மே தினக் கோரிக்கைகளைப் பகிர்ந்துகொண்டனர். அதேவேளை, ஆண்டு தோறும்…
2021 மே தின வாழ்த்துகள்!
வாசகர்கள் அனைவருக்கும் மலேசியாகினி குடும்பத்தாரின் இனிய மே தின வாழ்த்துகள். உழைக்கும் வர்க்கத்தினரின் உரிமைக்காகப் போராடி, செங்குருதி சிந்தியத் தோழர்களை நினைவில் நிறுத்துவோம்!
தடுப்புக் காவலில் கணபதி தாக்கப்பட்டதற்கான ஆதாரம் இல்லை – போலீசார்
போலிஸ் காவலில் இருந்தபோது, மருத்துவமனையில் இறந்த கணபதி தாக்கப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று கோம்பாக் மாவட்டக் காவல்துறை தலைவர் அரிஃபாய் தாராவே தெரிவித்தார். தடுப்புக் காவலை நீட்டிக்க மூன்று முறை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட போது, கணபதி ஒருபோதும் காவல்துறையினரால் தாக்கப்பட்டதாகப் புகார் கூறவில்லை என…
கால்கள், தோள்களில் ஏற்பட்ட பலத்தக் காயங்களால் கணபதி இறந்தார் –…
காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டு, மருத்துவமனையில் இறந்த கணபதியின் பிரேதப் பரிசோதனை அறிக்கையின் முடிவுகள், அவரது கால்களிலும் தோள்களிலும் ஏற்பட்ட பலத்த காயங்களினால்தான் அவர் இறந்தார் எனக் கூறுவதாக அவரது குடும்ப வழக்கறிஞர் கே கணேஷ் தெரிவித்துள்ளார். "இன்று (நேற்று) கோலாலம்பூர் மருத்துவமனையின் நோயியல் துறையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர்…
மே 4 முதல், புதிய ஐ.ஜி.பி.யாக அக்ரில் சானி
நாட்டின் புதியக் காவற்படைத் தலைவராக (ஐ.ஜி.பி), தற்போது துணைத் தலைவராக இருக்கும் அக்ரில் சானி அப்துல்லா சானி நியமிக்கப்பட்டுள்ளார், இது அடுத்த செவ்வாய்க்கிழமை (மே 4) முதல் நடைமுறைக்கு வரும். அந்த மூத்தக் காவல்துறை அதிகாரிக்குத், தேசியக் காவல்துறை தலைவருக்கான நியமனக் கடிதம், உள்துறை அமைச்சர் ஹம்சா ஜைனுடினிடம்…
பரவலாகி வரும் வீடியோவிற்குக் கணபதியின் மரணத்துடன் எந்தத் தொடர்பும் இல்லை…
இரண்டு நபர்கள் தாக்கப்பட்டதைக் காட்டும் சி.சி.டி.வி. காட்சிகள், போலிஸ் தடுப்புக் காவலின் போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, காலை இழந்து மரணமடைந்த கணபதியுடன் தொடர்பற்றது எனக் கோம்பாக் மாவட்டக் காவல்துறைத் தலைவர் அரிஃபாய் தாராவே தெரிவித்தார். சம்பவத்தின் நம்பகத்தன்மை மற்றும் இருப்பிடம் குறித்து அவரது தரப்பினர் விசாரித்து வருவதாக அரிஃபாய்…
40 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு, 14 நாட்கள் கட்டாயத்…
சார்ஸ்-CoV-2 (SARS-CoV-2) வேரியண்ட் (மாறுபாடு) ஆஃப் கன்சர்ன் (VOC) பரிமாற்றம் இருப்பதாக அறிவிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகள் கட்டாயமாக 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்பட வேண்டும். சுகாதார அமைச்சு ஓர் அறிக்கையில், அந்த 40 நாடுகளையும் பின்வருமாறு பட்டியலிட்டுள்ளது : அமெரிக்கா : அமெரிக்கா, அர்ஜென்டினா, பிரேசில், கொலம்பியா,…
வெளிநாட்டு தொழிலாளர் தற்கொலை – தேசியத் தொழிலாளர் கொள்கையை மறுபரிசீலனை…
நாட்டின் தற்போதையத் தொழிலாளர் கொள்கையை மறுஆய்வு செய்வதன் மூலம் ஊதியம் பெறாத வெளிநாட்டு தொழிலாளர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு மனிதவளத்துறை அமைச்சர் எம் சரவணனை ஒரு பொருளாதார நிபுணர் வலியுறுத்தினார். பாகிஸ்தான் நாட்டு ஊழியர் ஒருவர், 5 மாதங்கள் ஊதியம் வழங்கப்படாத்தால், கடந்த ஏப்ரல் 17-ம் தேதி தற்கொலை…
இன்று 3,332 புதிய நேர்வுகள், 15 மரணங்கள்
கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரையில், 3,332 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளது. சிலாங்கூர் தொடர்ந்து 1,083 நோய்த்தொற்றுகளுடன் அதிக எண்ணிக்கையைப் பதிவு செய்தது, தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக அங்கு 1,000-க்கும் மேற்பட்ட புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளன. இதற்கிடையில், இன்று 15 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன.…
பி.என்.பி தலைவராக அரிஃபின் ஜக்காரியா நியமிக்கப்படுவார்
பெர்மோடலன் நேஷனல் பெர்ஹாட்டின் (பி.என்.பி.) புதியத் தலைவராக, முன்னாள் தலைமை நீதிபதி அரிஃபின் ஜக்காரியா நியமிக்கப்பட உள்ளதாக ஓர் அறிக்கை தெரிவிக்கிறது. ஆதாரங்களை மேற்கோள் காட்டி, பி.என்.பி.யின் தலைவராக ஸெட்டி அக்தார் அஸிஸ்-க்குப் பதிலாக அரிஃபின் நியமிக்கப்படுவார் என தி எட்ஜ் செய்தி ஊடகம் கூறியுள்ளது. மலேசியாவின் மிகப்பெரிய…
வாக்கு18-ஐச் செயல்படுத்த ஈசி உடனடியாக நடவடிக்கை எடுக்கும் – தக்கியுட்டின்
நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து, வாக்களிக்கும் வயதைக் (வாக்கு 18) குறைக்க தேர்தல் ஆணையம் (ஈசி) உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என்று பிரதமர் திணைக்களத்தின் (நாடாளுமன்றம் மற்றும் சட்டம்) அமைச்சர் தக்கியுட்டின் ஹசான் தெரிவித்தார். "(அமைச்சரவை) முடிவைத் தொடர்ந்து, சில சட்ட விதிகள் மற்றும் தேவையான மென்பொருள் முறையைப்…
ஊதியம் வழங்காததால் பாகிஸ்தான் தொழிலாளி மரணம் – கொலையா? தற்கொலையா?
கடிதம் | ஓர் இளைஞன் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டான், இயற்கை காரணங்களால் அவன் இறக்கவில்லை; ஒரு விபத்தில் அவன் பலியாகவில்லை, கோவிட்-19 பெருந்தொற்று அவனைக் கொல்லவில்லை; ஊதியம் வழங்கப்படாததால் அவன் தனது உயிரை மாய்த்து கொண்டான். அதை அவன் தனது வீடியோ பதிவில் மிகத் தெளிவாக விளக்கியுள்ளான், அதில்…
பிஎன்பி தலைவர் பதவியை ஸெட்டி இராஜினாமா செய்கிறார்
அதன் வருடாந்திரப் பொதுக் கூட்டம் நடைபெறவிருக்கும் ஏப்ரல் 30-ஆம் தேதி, கும்புலான் பெர்மோடாலான் நேஷனல் பெர்ஹாட் (பிஎன்பி) தலைவர் பதவியிலிருந்து விலகப் போவதாக ஸெட்டி அக்தார் அஸிஸ் தெரிவித்தார். அந்த நாளில் அவர் தனது மூன்று ஆண்டு காலத்தை நிறைவு செய்வார் என்றும், இந்த ஆண்டு தொடக்கத்தில் பிரதமர்…
சிலாங்கூர், நெகிரி செம்பிலானில் 43 பள்ளிகள் இரண்டு நாட்களுக்கு மூடப்பட்டன
மாணவர்கள் மற்றும் அதன் ஊழியர்கள் மத்தியில், கோவிட் -19 பரவுவதால் சிலாங்கூரில் 30 பள்ளிகளும், நெகிரி செம்பிலானில் 13 பள்ளிகளும் இரண்டு நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டன. சிலாங்கூர் மாநிலச் சுகாதார இயக்குநர் டாக்டர் ஷா’ரி நகாடிமான், துப்புரவுப் பணிகளைச் செய்வதற்கும், மாணவர்களுக்குத் திரையிடப்படுவதற்கும் இந்த 2 நாள்கள் வாய்ப்பளிக்கும்…
யூபிஎஸ்ஆர் இனி இல்லை, 2021 பிடி3 தேர்வு இரத்து செய்யப்பட்டது
ஆரம்பப்பள்ளி மதிப்பீட்டுச் சோதனை (யுபிஎஸ்ஆர்), இந்த ஆண்டு முதல் முற்றிலுமாக நீக்கப்படும் என்று கல்வி அமைச்சர் டாக்டர் ராட்ஸி ஜிடின் தெரிவித்தார். இந்த ஆண்டிற்கான படிவம் மூன்று மதிப்பீடு (பி.டி.3) இரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் ராட்ஸி தெரிவித்தார். இன்று ஒரு சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விஷயத்தை…
இன்று 3,142 புதிய நேர்வுகள், மொத்த எண்ணிக்கை 400,000-ஐத் தாண்டியது
கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரையில், 3,142 கோவிட் -19 புதிய நேர்வுகளுடன், ஒட்டு மொத்த எண்ணிக்கை 401,953 -ஆகப் பதிவாகியுள்ளது எனச் சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். மேலும், இன்று 15 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில்…
ஐ.ஜி.பி. புகார் : அமைச்சர்கள்கூட காவல்துறையை விமர்சிக்கிறார்கள்
சாலை தடைகளைச் (எஸ்.ஜே.ஆர்.) செயல்படுத்துவதிலான அதிருப்தி விமர்சனங்களைப் பொதுமக்களிடமிருந்து மட்டுமல்லாமல், ‘அரசாங்கத் தரப்பினர்’-இடமிருந்தும் அரச மலேசியக் காவல்துறை (பி.டி.ஆர்.எம்.) எதிர்கொள்கிறது என்று காவற்படை தலைவர் அப்துல் ஹமீட் படோர் தெரிவித்தார். இது தொர்பில், தனது அதிருப்தியை வெளிப்படுத்திய அப்துல் ஹமீத், கோவிட் -19 தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க, தேசியப்…
‘பாலியல் வல்லுறவு நகைச்சுவை’ கட்டுரை – உள்துறை அமைச்சு எம்.கினியை…
ஒரு மாணவிக்கு எதிரான பாலியல் பலாத்கார அச்சுறுத்தல் குறித்து, காவற்படை துணைத் தலைவர் அக்ரில் சானி அப்துல்லா சானி தெரிவித்த கருத்து அடிப்படையிலான கட்டுரை தொடர்பில் விசாரிக்க உள்துறை அமைச்சு (கே.டி.என்) மலேசியாகினி-யையும் சைனா பிரஸ்-ஐயும் அழைக்கும். உள்துறை அமைச்சின் கூற்றுப்படி, அந்தச் செய்தி அறிக்கை தவறானது. "இதுதொடர்பாக,…
ஆடியோ பதிவு : அன்வரிடம் வாக்குமூலம் பதிவு – புக்கிட்…
அவருக்கும் அம்னோ தலைவர் டாக்டர் அஹ்மத் ஜாஹிட் ஹமீடிக்கும் இடையே நடந்த உரையாடலைக் குறிப்பதாகக் கூறப்படும் ஆடியோ பதிவு குறித்து, எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிமிடம் வாக்குமூலம் எடுத்துள்ளதை அரச மலேசியக் காவல்துறை உறுதிப்படுத்தியது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 108 (2) கீழ் விசாரணை நடத்த, கோலாலம்பூர்,…
அவசரகாலம் : 12 எதிர்க்கட்சித் தலைவர்கள் அகோங்கை எதிர்கொள்வார்கள் என்று…
12 எதிர்க்கட்சித் தலைவர்கள் அடங்கிய அவசரகாலப் பிரகடன நிறைவு செயற்குழு, அவசரநிலை குறித்த அவர்களின் கோரிக்கைகளை விவரிக்க மாட்சிமை தங்கியப் பேரரசரைச் சந்திக்க திட்டமிட்டுள்ளது. இருப்பினும், அதன் தலைவர் காலிட் சமாட் கருத்துப்படி, தூதுக்குழுவில் இருக்கும் 12 தலைவர்களின் பெயர்கள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. "இது அரண்மனை நிர்ணயிக்கும்…
கணபதி மரணத்திற்குச் சுயாதீன விசாரணை வேண்டும் – ம.இ.கா. கோரிக்கை
காவல்துறை தடுப்புக் காவலில் இருந்தபோது, கால் துண்டிக்கப்பட்டு இறந்த கணபதியின் மரணம் குறித்து சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டுமென ம.இ.கா. அழைப்பு விடுத்தது. சுயாதீனப் போலிஸ் புகார்கள் மற்றும் தவறான நடத்தை ஆணையம் (ஐபிசிஎம்சி) உருவாக்கப்பட்டதன் முக்கியத்துவத்தைச் சமீபத்திய சம்பவம் நிரூபிக்கிறது என்று ம.இ.கா. உதவித் தலைவர் சிவராஜ்…
நிக்கி கும்பலுடன் தொடர்பு – 10 போலீசார், 2 எம்.ஏ.சி.சி.…
தொழிலதிபர் நிக்கி லியோ சூன் ஹீ-உடன் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும், பல மாநிலங்களைச் சேர்ந்த 12 அமலாக்க அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள், 35 முதல் 49 வயதுக்கு உட்பட்ட, 10 போலிஸ் அதிகாரிகளும் இரண்டு மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய (எம்.ஏ.சி.சி) அதிகாரிகளும் ஆவர்…
‘தமிழர் எழுச்சி விழா’
உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் ஏற்பாட்டில், சுங்கை சிப்புட் தொகுதி மஇகா மற்றும் பேராக் தோழமை அமைப்புகளின் ஆதரவோடு, மாபெரும் ‘தமிழர் எழுச்சி விழா’ நடைபெறவுள்ளது. இவ்விழா எதிர்வரும் மே 2-ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, சுங்கை சிப்புட் மாநாட்டு மையத்தில், காலை 8 மணிக்குத் தொடங்கும். மொழி, இனம்,…