தென் சீனக் கடல் தீர்ப்பினால் ‘சச்சரவு மேலும் மோசமடையும்’- சீனத் தூதர்

seaதென்  சீனக்  கடலில்   சீனா   உரிமை   கொண்டாடுவதை   நிராகரிக்கும்   அனைத்துலக  நீதிமன்றத்தின்  தீர்ப்பால்  “சச்சரவு   மேலும்  மோசமடையலாம்,  மோதல்களும்  நிகழலாம்”  என  அமெரிக்காவுக்கான   சீனத்   தூதர்   எச்சரித்துள்ளார்.

வாஷிங்டனில்     ஒரு  கருத்தரங்கில்  பேசிய   சீனத்   தூதர்   சூய்  தியான்கை ,  சீனாவைப்  பொருத்தவரை    பிரச்னைகளைச்  சம்பந்தப்பட்ட    தரப்புகளுடன்   பேசித்  தீர்த்துக்கொள்வதையே   விரும்புகிறது  என்றார்.