கோவிட் 19 : இன்று 958 புதியத் தொற்றுகள், 3 இறப்புகள்

நாட்டில், இன்று மதியம் நிலவரப்படி, 958 கோவிட் -19 புதியத் தொற்றுகள் மற்றும் மூன்று இறப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சபாவில் அதிக எண்ணிக்கையிலான (53.4 %) புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன, அதற்கடுத்த நிலையில் கிள்ளான் பள்ளத்தாக்கு (29.9 %) மற்றும் நெகிரி செம்பிலானில் (16%) எனப் புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன.

இன்று சபாவில் மூன்று இறப்புகள் பதிவாகியுள்ளதைத் தொடர்ந்து, கோவிட் -19 இறப்பு எண்ணிக்கை அம்மாநிலத்தில் 186-ஆக உயர்ந்துள்ளது, இது நாட்டின் மொத்த இறப்பு எண்ணிகையில் (329) 56.53 விழுக்காடு ஆகும்.

பஹாங் மற்றும் பெர்லிஸில் இன்று புதியத் தொற்றுகள் எதுவும் பதிவாகவில்லை எனச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

அவசரப் பிரிவில் 110 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 42 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

512 புதிய சம்பவங்களுடன், சபா தொடர்ந்து அத்தொற்றுக்கு அதிகம் பாதிப்புக்குள்ளான மாநிலமாகத் திகழ்கிறது

சபாவை அடுத்து, மாநிலம் வாரியாகப் புதியத் தொற்றுகளின் எண்ணிக்கை :-

நெகிரி செம்பிலான் மற்றும் சிலாங்கூரில் தலா 153, கோலாலம்பூரில் 46, பினாங்கில் 25, பேராக்கில் 24, கெடாவில் 19, ஜொகூரில் 9, கிளந்தானில் 7, திரெங்கானுவில் 4, சரவாக் மற்றும் மலாக்காவில் தலா 2, புத்ராஜெயா மற்றும் லாபுவானில் தலா 1.