நாட்டில் இன்று, 3,309 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. சிலாங்கூர் தொடர்ந்து அதிக (1,213) புதியப் பாதிப்புகளைப் பதிவுசெய்துள்ளது. அதனைத் தொடர்ந்து சபாவும் (432) ஜொகூரும் (329) உள்ளன. 2,293 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 226 பேர் சிகிச்சை…
தானா மேரா மருத்துவமனையின் இணை கட்டிடத்தில் தீ
கட்டுமானத்தில் உள்ள தானா மேரா மருத்துவமனை இணைப்பு கட்டடத்தின் ஒரு பகுதி, நேற்றிரவு நடந்த ஒரு சம்பவத்தில் தீப்பிடித்தது. இரவு 8.54 மணியளவில், இந்தச் சம்பவம் குறித்து தங்களுக்கு அழைப்பு வந்ததாக, தானா மேரா தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவின் தலைமை உதவி தீயணைப்பு கண்காணிப்பாளர் மொஹமட் ரஃபேன்…
பி.எச். : அவசரக்காலக் குழுவில் சேர முடிவு செய்வதற்கு முன்,…
அவசரகால அறிவிப்பு குறித்து, மாட்சிமை தங்கியப் பேரரசருக்கு ஆலோசனை வழங்க உருவாக்கப்படவுள்ள இருதரப்பு கட்சிகள் சார்ந்த குழுவின் விதிமுறைகளை ஆய்வு செய்ய பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) விரும்புகிறது. "நாங்கள் முதலில் அதன் விவரங்களைத் தெளிவாக அறிய விரும்புகிறோம். குறிப்பு விதிமுறைகளையும் எத்தனை உறுப்பினர்கள் இருப்பார்கள் என்பதையும் நாம் கவனிக்க…
கோவிட் 19 : இன்று 3,339 புதிய நேர்வுகள், 7…
நாட்டில் இன்று, 3,339 புதியக் கோவிட் -19 நேர்வுகளும் 7 மரணங்களும் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. 2,676 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 240 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 93 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது. நாட்டில் இன்று அனைத்து…
மிரி காவல்நிலையச் சிறைக்கட்டறையில் குழந்தை பாலியல் பலாத்காரம், யார் பொறுப்பு?
கடிதம் | நாட்டில் நாளுக்கு நாள், கோவிட்-19 தொற்றின் தாக்கம் அதிகரித்துவரும் வேளையில், அதற்கான தீர்வு என்ன, பாதிக்கப்பட்டவர்களின் நிலை என்னா, எவ்வளவு விரைவில் தடுப்பூசி கிடைக்கும் என நாடே கவலைகொண்டிருக்கும் வேளையில், ஆங்காங்கே பாலியல் பலாத்காரச் சம்பவங்களும் நடந்தே வருகின்றது. 2021, ஜனவரி 8-ம் தேதி, சரவாக்,…
ஜனவரி 20 முதல், அனைத்து மாணவர்களும் இயங்கலையில் கற்றலைப் பின்பற்றுவர்
அனைத்து தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளி மாணவர்களும், ஜனவரி 20 முதல் தொடங்கவுள்ள கல்வியாண்டை, அவரவர் பொருத்தத்திற்கு ஏற்ப, வீட்டிலேயேக் கற்பித்தல் மற்றும் கற்றல் முறைகளைப் (பி.டி.பி.ஆர்.) பின்பற்றுவர் எனக் கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. முக்கியமான தேர்வுக்கு அமரவிருக்கும் மாணவர்கள் மட்டுமே ஜனவரி 20 முதல் பள்ளி அமர்வுக்குப்…
38 ரோஹிங்கியா குழந்தை தொழிலாளர்களைப் போலீசார் மீட்டனர்
கடந்த வியாழக்கிழமை, முகக் கவரி தயாரிக்கும் தொழிற்சாலையிலிருந்து, கட்டாயத் தொழிலாளர்கள் எனச் சந்தேகிக்கப்படும், 38 ரோஹிங்கியா குழந்தைகளைக் காவல்துறையினர் மீட்டனர். நேற்றைய சினார் ஹரியான் செய்தியின்படி, ஜனவரி 14-ம் தேதி இரவு, சிலாங்கூர், செலாயாங்கில் இரண்டு இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறையின் (ஜே.எஸ்.ஜே),…
கோவிட் 19 : இன்று 4,029 புதிய நேர்வுகள், 8…
நாட்டில் இன்று, 4,029 புதியக் கோவிட் -19 நேர்வுகளை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது, இது இதுவரையிலான ஆக அதிக தினசரி பதிவாகும். முந்தைய ஆக அதிகப் பதிவு, இரண்டு நாட்களுக்கு முன்பு, 3,337 ஆகும். சிலாங்கூரில் 1,400-க்கும் அதிகமான நேர்வுகள் பதிவாகியுள்ளன, அதைத் தொடர்ந்து ஜொகூர் மற்றும் சபா.…
பிரதமர் : தொழில்நுட்பச் செயற்குழு, அவசரகால நிர்வாகம் சீராக நடப்பதை…
நாடு முழுவதும் அவசரநிலை மேலாண்மை சீராக இயங்குவதை உறுதிசெய்ய, அவசரநிலை மேலாண்மை தொழில்நுட்பக் குழுவை அமைக்க அரசாங்கம் இன்று ஒப்புக் கொண்டது என்று பிரதமர் முஹைதீன் யாசின் கூறினார். இந்தக் குழுவிற்குப் பிரதமர் துறை இலாகாவின் (நாடாளுமன்றம் மற்றும் சட்டம்) அமைச்சர் தக்கியுதீன் ஹசானும் அரசாங்கத்தின் தலைமை செயலாளர்…
கோவிட் -19 தடுப்பூசி சோதனைக்காக, 3,000 தன்னார்வலர்கள் தேவை
கோவிட் -19 தடுப்பூசியின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு குறித்த மருத்துவ பரிசோதனைகளைச் செயல்படுத்த, மலேசிய சுகாதார அமைச்சிற்கு 3,000 தன்னார்வலர்கள் தேவைபடுகிறது. மலேசியச் சுகாதார அமைச்சின் அறிவிப்பின் படி, குறைந்தது 18 வயதுடைய எவரும் தன்னார்வலராக முன்வரலாம். சீன மருத்துவ அறிவியல் அகாடமியின் மருத்துவ உயிரியல் மருத்துவ நிறுவனம்…
`இரவுச் சந்தை திறக்கப்படாவிட்டால், பிரதமர் அலுவலகத்தின் முன் கூடுவோம்’
மலேசிய சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் சங்கத்தின் (இக்லாஸ்) தலைவர் மொஹமட் ரிட்ஜுவான் அப்துல்லா, நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.) காலம் முழுவதும், இரவுச் சந்தை வர்த்தகர்களைத் தொடர்ந்து செயல்பட அனுமதிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினார். பி.கே.பி. இரண்டு வார காலத்திற்கு மேல் நீடிக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும், அதிக…
‘அவசரகாலப் பிரகடனம் அரசியலமைப்புக்கு உட்பட்டது , மக்களின் உரிமைகளை மீறியதல்ல’…
கோவிட்-19 தொற்றுநோய் பரவுவதைத் தடுப்பதற்கான அவசரகால அறிவிப்பு மக்களின் மனித உரிமைகளை மீறவில்லை என்றும், இந்த அமலாக்கம் அரசியலமைப்புச் சட்டமாகும் என்றும் முன்னாள் மத்திய நீதிமன்ற நீதிபதி கோபால் ஸ்ரீ ராம் தெரிவித்தார். இருப்பினும், அடிப்படை சுதந்திரங்களை மீறினால், அவசரகாலத்தில் அறிவிக்கப்பட்ட சட்டங்களை நீதிமன்றத்தில் சவால் செய்யலாம் என்றார்…
கோவிட் 19 : இன்று 3,211 புதிய நேர்வுகள், 8…
நாட்டில் இன்று, 3,211 புதியக் கோவிட் -19 நேர்வுகளும் 8 மரணங்களும் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதேவேளையில் 1,939 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 204 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 87 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது. பெர்லிஸில் இன்று…
ரோன்95, ரோன்97 5 சென்’னும் டீசல் 3 சென்’னும் உயர்வு
இன்று நள்ளிரவு தொடங்கி, ரோன்95 மற்றும் ரோன்97 பெட்ரோலின் சில்லறை விலைகள் முறையே லிட்டருக்கு ஐந்து சென்னும், டீசலின் விலை லிட்டருக்கு மூன்று சென்னும் உயர்ந்து, ஒரு வார காலத்திற்கு, ஜனவரி 22 வரை அமலில் இருக்கும். நிதி அமைச்சின் அறிக்கையின்படி, ரோன்95 பெட்ரோலின் புதிய சில்லறை விலை…
நாளை தொடக்கம் சிபு, கிளந்தானிலும் பி.கே.பி.
கோவிட் -19 பாதிப்புகள் அதிகரித்ததைத் தொடர்ந்து, கிளந்தானிலும், சரவாக், சிபுவிலும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.) செயல்படுத்தப்படவுள்ளது. மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறுகையில், கிளந்தான் முழுவதும் நாளை, 16 தொடங்கி ஜனவரி 25 வரையில் பி.கே.பி. அமலில் இருக்கும் சரவாக்கில், சிபு, செலங்காவ் மற்றும்…
அவசரகாலப் பிரகடனம் உங்களை எவ்வாறு பாதிக்கும்?
அவசரகாலச் (அத்தியாவசிய அதிகாரங்கள்) சட்டம் 2021, ஜனவரி 11-ல் அமலாக்கம் கண்டு, தற்போது நடைமுறையில் உள்ளது. இந்த அவசரச்சட்டத்திற்குக் காலாவதி இல்லை. அவசரகாலச் சட்டம் மாட்சிமை தங்கியப் பேரரசரால், மக்களவையின் அனுமதியின்றி, அவசர காலங்களில் நிறைவேற்றக்கூடிய சிறப்பு சட்டம் ஆகும். அவசரகாலச் (அத்தியாவசிய அதிகாரங்கள்) சட்டம் 2021-ன், அதிகாரங்கள்…
‘ஜாஹிட் பதவி விலக வேண்டும்’ – பொந்தியான் அம்னோ இளைஞர்…
"மரியாதையுடன்" பதவி விலகுங்கள் என்று ஜாஹித்தைப் பொந்தியான் அம்னோ இளைஞர் தலைவர் மொஹமட் ஹெல்மி புவாங் கேட்டுக்கொண்டார். அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமீடியை, கட்சியை வழிநடத்துவதிலிருந்து ஓய்வு பெறுமாறு மொஹட் ஹெல்மி புவாங் அறிவுறுத்தினார். தலைவரின் அணுகுமுறைகள் தற்போதையச் சூழலுக்கு ஏற்ப, குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டிருக்க வேண்டும்…
டாக்டர் எம் : பிரதமர் வேட்பாளராக ஷாஃபியை டிஏபி விரும்புகிறது
டிஏபி பொதுச்செயலாளர் லிம் குவான் எங், வாரிசன் தலைவர் ஷாஃபி அப்தாலை எதிர்க்கட்சி கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று டாக்டர் மகாதிர் மொஹமட் கூறினார். பி.கே.ஆர். தலைவர் அன்வரால் பெரும்பான்மை எம்.பி.க்களின் ஆதரவை நிரூபிக்க முடிந்தால், அவர் பிரதமர் பதவி ஏற்பதை, தான் "எதிர்க்கவில்லை"…
‘நான் பால்மரம் சீவும் தொழிலாளியின் மகன், மக்களை இகழ்வது என்…
தனது முந்தைய அறிக்கையால் வருத்தப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்க அம்னோ பொதுச்செயலாளர் அஹ்மத் மஸ்லான் முன்வந்தார். மற்றவர்களை அவமானப்படுத்த விரும்பும் நபர் தான் அல்ல என்றும் அவர் கூறினார். உயர் படித்த குழுவினருக்குப் பொதுத் தேர்தலை (ஜி.இ.) விரைவில் நடத்த வேண்டியதன் அவசியத்தைப் புரிந்துகொள்ள முடியும் என்று விவரித்த தனது…
இந்திராவின் வழக்கை இரத்து செய்யுங்கள், ஐ.ஜி.பி.யும் மற்ற மூவரும் கோரிக்கை
தனது முன்னாள் கணவரைக் கைது செய்து, தங்கள் மகள் பிரசானா தீட்சாவைத் திருப்பித் தரத் தவறிவிட்டனர் என்ற குற்றச்சாட்டின் பேரில், எம்.இந்திரா காந்தி தொடுத்துள்ள வழக்கை இரத்து செய்யுமாறு, காவல்துறை தலைவரும் (ஐ.ஜி.பி) மற்ற மூன்று பேரும் விண்ணப்பித்துள்ளனர். கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில், ஐ.ஜி.பி., அரச மலேசியக் காவல்துறை, உள்துறை…
கோவிட் 19 : இன்று 3,337 புதிய நேர்வுகள், 15…
இன்று, 3,337 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் பதிவான தினசரி நேர்வுகளில் இதுவே அதிகம் என சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்தார். முன்னதாக, ஜனவரி 12-ம் தேதி, ஆக அதிக (3,309) நேர்வுகள் பதிவாகியது குறிப்பிடத்தக்கது. மேலும்…
அறிக்கை : பி.என். அரசாங்கத்தின் கீழ் மனித உரிமைகள் மறுக்கப்படுகின்றன
நேற்று வெளியிடப்பட்ட ஒரு சர்வதேசத் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் ஆண்டு அறிக்கை, தேசியக் கூட்டணி அரசாங்கத்தின் (பிஎன்) கீழ், மலேசியாவில் மனித உரிமைகள் குறைந்து வருவதாகக் கூறியுள்ளது. பேச்சு சுதந்திரத்தையும் அமைதியான ஒன்றுகூடல் சட்டத்தையும் அரசாங்கம் தீவிரமாக மீறியதாகவும், ஊடகங்கள் மீது தாக்குதல்களை நடத்தியதாகவும் அந்த அறிக்கை கூறியுள்ளது.…
அவசரகால சுயாதீனக் குழு : வேட்பாளரின் பெயரைச் சமர்ப்பிக்க அன்வரிடம்…
அவசரகால அமலாக்கத்தை முன்கூட்டியே நிறுத்த முடியுமா என்பதை தீர்மானித்து, மாமன்னருக்குப் பரிந்துரை செய்யும் அவசரகால சுயாதீனக் குழுவை அமைக்க, எதிர்க்கட்சியைச் சேர்ந்த மூன்று வேட்பாளர்களின் பெயர்களைக் கோரி, எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிமுக்குப் பிரதமர் துறை அமைச்சர் தக்கியுதீன் ஹசன் கடிதம் அனுப்பியுள்ளார். இதனை உறுதிசெய்த, பெயர் குறிப்பிட…
‘உண்மையில் நான் அவசரநிலையை ஆதரிப்பேன்…’ – எஸ் அருட்செல்வன்
கடிதம் l உண்மையில் நான் அவசரநிலையை ஆதரிப்பேன், மக்களின் வசதிக்காகத் தனியார் மருத்துவமனைகள் பயன்படுத்தப்பட்டு, அரசு மருத்துவமனைகளின் சுமையைக் குறைப்பதுவே, நமது பிரதமர் முஹைதீன் யாசினின் நோக்கம் என்றிருந்தால்… உண்மையில், நான் அவசரநிலையை ஆதரிப்பேன், வேலை இழந்த ஒவ்வொரு மலேசியருக்கும், மாதா மாதம் ஒரு நிலையான ஊதியம் வழங்கப்படுவதை…