மகாதிர்: குற்றச் செயல்கள் பெருகும் என நஜிப் எதிர்பார்க்கவில்லை

1dr-mபிரதமர் நஜிப் அப்துல் ரசாக்,  உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தை இரத்துச் செய்தபோது குற்ற விகிதம் இந்த அளவுக்குப் பெருக்கம் காணும் என்பதை  அவர் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை  என டாக்டர் மகாதிர் முகம்மட் கூறுகிறார்.

“அவர் (தடுப்புச் சட்டத்தை எடுத்தெறிய) வாக்குறுதி அளித்தது உண்மைதான். ஆனால், குற்றச்செயல்கள் பல்கிப் பெருகும் என்பதை எதிர்பார்க்கவில்லை.  நீங்களும் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள்; நானும் எதிர்பார்க்கவில்லை.

“சுற்றிலும் நடக்கும் குற்றச்செயல்களைப் பாருங்கள். சும்மா நடப்போம் என்றால்கூட பாதுகாப்பு இல்லாமல் போய்விட்டது”.

பல்வேறு முனைகளிலிருந்தும்  குறைகூறப்பட்டுவரும் தடுப்புச் சட்ட (பிசிஏ) திருத்தங்களைத் தற்காத்துப் பேசியபோது முன்னாள் பிரதமர் மகாதிர் இவ்வாறு குறிப்பிட்டார்.