இனி கோயில் உடைப்பை அனுமதியோம்: குழு சூளுரை

manoசெப்டம்பர் மாதம் கோலாலும்பூரில் 101ஆண்டு பழைமையான ஸ்ரீமுனீஸ்வரர் காளியம்மன் ஆலயத்தை உடைக்கும் முயற்சி நடைபெற்றதைத் தொடர்ந்து வருங்காலத்தில் கோயில் உடைப்புகளைத் தடுப்பதற்காக இந்து பாதுகாப்புப் படை ஒன்று அமைக்கப்படும் என  தெலுக் இந்தான் முன்னாள் எம்பி, எம். மனோகரன் கூறினார்.

அதில் இளைஞர்கள் சேர்க்கப்பட்டு  அவர்கள் ஆலயங்களைப் பாதுகாக்கவும்  அவற்றின் நிர்வாகத்தைச் சீர்படுத்தவும் உதவியாக இருப்பார்கள் என்றாரவர்.

“அது  இந்து சமய இளைஞர்களிடையே கட்டொழுங்கை வலுப்படுத்தவும் உதவியாக இருக்கும்.

“அது முழுக்க முழுக்க ஒரு பாதுகாப்பு இயக்கம்தான்”, என மலேசியாகினியிடம் மனோகரன் தெரிவித்தார்.

நேற்று  அதே ஆலயத்தில்  20 பேர் அதில் உறுப்பினர்களாகச் சேர்ந்தனர்.