மகாதிர்: அம்னோவில் தகுதியற்றவர்கள் வெற்றிபெற பண அரசியலே காரணம்

mahathirஅண்மையில் நடந்து முடிந்த அம்னோ தேர்தலில் வெற்றிபெற தகுதியற்ற பலர் வென்றார்கள் என்றால் அதற்கு, அவர்கள் பணத்தை வாரி இறைத்ததுதான் காரணமாகும் என்கிறார் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்.

“அம்னோ தேர்தலில் ஊழலை ஒழித்துவிட்டதாகத் தெரிவித்தார்கள், நான் நம்பவில்லை.

“நிறைய பணம் செலவிடப்பட்டதாக நினைக்கிறேன். வெற்றிபெற முடியாதவர்கள் எல்லாம் வென்றார்கள் என்றால் அதற்கு அவர்கள் செலவிட்ட பணம்தான் காரணம்”, என புத்ரா ஜெயாவில் மகாதிர் கூறினார்.