எல்லாக் குற்றங்களுக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள்மீது பழி போடக் கூடாது

ahmadநாட்டில் நடக்கும் எல்லாக் குற்றங்களுக்குமே வெளிநாட்டவர்தான் காரணம் என்று ஒட்டுமொத்தமாக அவர்கள்மீது பழி போடக்கூடாது என்கிறார் உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி.

கடும் குற்றங்களில் 10-இலிருந்து 15 விழுக்காடுவரைதான் வெளிநாட்டவர்களால் செய்யப்படுகின்றன என்றும் பெரும்பாலான குற்றங்களைப் புரிபவர்கள் மலேசியர்தான் என்றும் அஹ்மட் ஜாஹிட், இன்று மக்களவையில் கூறினார்.