இசி: தேர்தல் தொகுதிகள் திருத்தப்படுவது மலாய்க்காரர் அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்காக அல்ல

1-ecதேர்தல் ஆணையம்(இசி) விரைவில்  தொகுதிகளைத் திருத்தி அமைக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளவிருக்கிறது. ஆனால், அது மலாய்க்காரர் அரசியல் அதிகாரத்தைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் செய்யப்படாது என்று இசி தலைவர் அப்துல் அசீஸ் அப்துல் யூசுப் கூறுகிறார்.

அரசியலமைப்பைப் பின்பற்றி அந்நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

“மலாய்க்காரர் அதிகாரத்தைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் இசி தேர்தல் தொகுதிகளைத் திருத்தி அமைப்பதில்லை”, என அப்துல் அசீஸ் மலேசீயாகினிக்கு அனுப்பிய குறுஞ்செய்தியில் கூறி இருந்தார்.