அரசாங்கம் நேரடிப் பேச்சு வழி பொருள் கொள்முதல் செய்வதைக் குறைத்துக் கொள்ளும்

1 paulஅரசாங்கம், ஊழலைத் தடுக்கும் முயற்சிகளில் ஒன்றாக நேரடிப் பேச்சு நடத்திப் பொருள் வாங்கும் பழக்கத்தை குறைத்துக் கொண்டு டெண்டர் முறையைப் பின்பற்றும்.

“இனி, பொருள் வாங்குவதற்கு, தவிர்க்க முடியாத நிலை இருந்தாலொழிய,  நேரடிப் பேச்சு நடத்துவதில்லை  என அமைச்சரவை கடந்த வாரக் கூட்டத்தில் முடிவு செய்தது”, என அமைச்சர் பால் லவ் கூறினார்.